கோவை காவலர் குடியிருப்பில் கொள்ளை; பெண் போலீஸின் வீட்டிலே கைவரிசைக்காட்டிய நபருக்கு போலீஸ் வலைவீச்சு!

கோவை காந்திரப்புரத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் உள்ள பெண் போலீஸின் வீட்டிலேயே பணம் மற்றும் நகைகளைக் கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.


கோவை: கோயம்புத்தூரையடுத்த சூலூர் பகுதியைச் சேர்ந்தவர் இந்திராணி. இவர் மத்தியஅனைத்து காவல்நிலையத்தில் ஏட்டாக பணியாற்றிவருகிறார்.

இதனால் கடந்த ஒன்றரை ஆண்டுகாலமாக காந்திபுரத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்துவருகிறார். இந்நிலையில் தான் நேற்று முன்தினம், காவலர் குடியிருப்பில் உள்ள தங்களது வீட்டைப்பூட்டிவிட்டு குடும்பத்துடன் சொந்த ஊரான சூலூருக்குச் சென்றுவிட்டனர்.

பின்னர் நேற்று கோவை திரும்பிய நிலையில், வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்துக்கிடந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்தப் இந்திராணி உள்ளே சென்று பார்த்தப்போது, பீரோவில் இருந்த நான்கரை பவுன் தங்க நகைள் கொள்ளைப்போயிருந்தது தெரியவந்துள்ளது. இத்துடன் பீரோவில் இருந்த பணமும் மாயமாகியுள்ளது. இதனையடுத்து இதுக்குறித்து.

இந்திராணி காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கொள்ளையில் ஈடுபட்ட நபர்களைத் தேடி வருகின்றனர்.

குறிப்பாக மிகுந்த பாதுகாப்பு உள்ள காவலர் குடியிருப்பில் கொள்ளைப் போன சம்பவம் மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...