கோவை காவலர் குடியிருப்பில் கொள்ளை; பெண் போலீஸின் வீட்டிலே கைவரிசைக்காட்டிய நபருக்கு போலீஸ் வலைவீச்சு!

கோவை காந்திரப்புரத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் உள்ள பெண் போலீஸின் வீட்டிலேயே பணம் மற்றும் நகைகளைக் கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.


கோவை: கோயம்புத்தூரையடுத்த சூலூர் பகுதியைச் சேர்ந்தவர் இந்திராணி. இவர் மத்தியஅனைத்து காவல்நிலையத்தில் ஏட்டாக பணியாற்றிவருகிறார்.

இதனால் கடந்த ஒன்றரை ஆண்டுகாலமாக காந்திபுரத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்துவருகிறார். இந்நிலையில் தான் நேற்று முன்தினம், காவலர் குடியிருப்பில் உள்ள தங்களது வீட்டைப்பூட்டிவிட்டு குடும்பத்துடன் சொந்த ஊரான சூலூருக்குச் சென்றுவிட்டனர்.

பின்னர் நேற்று கோவை திரும்பிய நிலையில், வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்துக்கிடந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்தப் இந்திராணி உள்ளே சென்று பார்த்தப்போது, பீரோவில் இருந்த நான்கரை பவுன் தங்க நகைள் கொள்ளைப்போயிருந்தது தெரியவந்துள்ளது. இத்துடன் பீரோவில் இருந்த பணமும் மாயமாகியுள்ளது. இதனையடுத்து இதுக்குறித்து.

இந்திராணி காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கொள்ளையில் ஈடுபட்ட நபர்களைத் தேடி வருகின்றனர்.

குறிப்பாக மிகுந்த பாதுகாப்பு உள்ள காவலர் குடியிருப்பில் கொள்ளைப் போன சம்பவம் மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...