கிணத்துக்கடவு அக்சயா பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற விழிப்புணர்வு கூட்டத்தில் ராக்கிங் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உதவி ஆய்வாளர் அருள்பிரகாஷ் மாணவர்களிடையே பேசினர்.
கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அக்சயா பொறியியல் கல்லூரியில் இன்று முதலாமாண்டு மாணவர்களுக்கான ராக்கிங் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவ-மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட கிணத்துக்கடவு காவல் நிலைய உதவி ஆய்வாளர் அருள்பிரகாஷ் ராக்கிங் குறித்த மாணவ மாணவர்களுக்கிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திப் பேசியபோது:- கொரோனா பரவல் குறைந்து வருவதன் காரணமாகத் தமிழக அரசு கல்லூரிகளைத் திறக்க அனுமதி அளித்துள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக கல்லூரிப்படிப்பு முற்றிலும் பாதிப்பு அடைந்து உள்ளது என்றும், எனவே கல்லூரியில் முதலாமாண்டு சேர்ந்துள்ள மாணவர்களை ராக்கிங் செய்ய கூடாது.

பெற்றோர்கள் கஷ்டப்பட்டு உழைத்து கல்லூரியில் சேர்த்து உள்ளனர். ராக்கிங் செய்வதால் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஏற்பட்டுப் படிப்பு பாதிப்பு ஏற்படும் என்றும், கல்லூரியில் ராக்கிங் யாராவது ஈடுபட்டால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம் என்றும், ராக்கிங் குறித்து புகார் அளித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உதவி ஆய்வாளர் அருள்பிரகாஷ் மாணவர்களிடையே பேசினர்.

இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் கிணத்துக்கடவு காவல் நிலைய தலைமைக் காவலர் சுரேஷ், கல்லூரி பேராசிரியர்கள், ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவ-மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட கிணத்துக்கடவு காவல் நிலைய உதவி ஆய்வாளர் அருள்பிரகாஷ் ராக்கிங் குறித்த மாணவ மாணவர்களுக்கிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திப் பேசியபோது:- கொரோனா பரவல் குறைந்து வருவதன் காரணமாகத் தமிழக அரசு கல்லூரிகளைத் திறக்க அனுமதி அளித்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக கல்லூரிப்படிப்பு முற்றிலும் பாதிப்பு அடைந்து உள்ளது என்றும், எனவே கல்லூரியில் முதலாமாண்டு சேர்ந்துள்ள மாணவர்களை ராக்கிங் செய்ய கூடாது.
பெற்றோர்கள் கஷ்டப்பட்டு உழைத்து கல்லூரியில் சேர்த்து உள்ளனர். ராக்கிங் செய்வதால் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஏற்பட்டுப் படிப்பு பாதிப்பு ஏற்படும் என்றும், கல்லூரியில் ராக்கிங் யாராவது ஈடுபட்டால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம் என்றும், ராக்கிங் குறித்து புகார் அளித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உதவி ஆய்வாளர் அருள்பிரகாஷ் மாணவர்களிடையே பேசினர்.
இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் கிணத்துக்கடவு காவல் நிலைய தலைமைக் காவலர் சுரேஷ், கல்லூரி பேராசிரியர்கள், ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.