இனி ராக்கிங் செய்தால் அவ்வளவு தான்... கிணத்துக்கடவில் காவல்துறை எச்சரிக்கை.!!

கிணத்துக்கடவு அக்சயா பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற விழிப்புணர்வு கூட்டத்தில் ராக்கிங் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உதவி ஆய்வாளர் அருள்பிரகாஷ் மாணவர்களிடையே பேசினர்.


கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அக்சயா பொறியியல் கல்லூரியில் இன்று முதலாமாண்டு மாணவர்களுக்கான ராக்கிங் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.



இந்த கூட்டத்தில் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவ-மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட கிணத்துக்கடவு காவல் நிலைய உதவி ஆய்வாளர் அருள்பிரகாஷ் ராக்கிங் குறித்த மாணவ மாணவர்களுக்கிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திப் பேசியபோது:- கொரோனா பரவல் குறைந்து வருவதன் காரணமாகத் தமிழக அரசு கல்லூரிகளைத் திறக்க அனுமதி அளித்துள்ளது.



கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக கல்லூரிப்படிப்பு முற்றிலும் பாதிப்பு அடைந்து உள்ளது என்றும், எனவே கல்லூரியில் முதலாமாண்டு சேர்ந்துள்ள மாணவர்களை ராக்கிங் செய்ய கூடாது.



பெற்றோர்கள் கஷ்டப்பட்டு உழைத்து கல்லூரியில் சேர்த்து உள்ளனர். ராக்கிங் செய்வதால் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஏற்பட்டுப் படிப்பு பாதிப்பு ஏற்படும் என்றும், கல்லூரியில் ராக்கிங் யாராவது ஈடுபட்டால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம் என்றும், ராக்கிங் குறித்து புகார் அளித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உதவி ஆய்வாளர் அருள்பிரகாஷ் மாணவர்களிடையே பேசினர்.



இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் கிணத்துக்கடவு காவல் நிலைய தலைமைக் காவலர் சுரேஷ், கல்லூரி பேராசிரியர்கள், ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...