வேலியே பயிரை மேய்ந்த கதை..! கோவையில் வேலை பார்க்கும் சக ஊழியரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற நபருக்கு போலீசார் வலைவீச்சு!!

கோவை கிழக்கு பகுதி அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் தவ்லத் நிஸா தலைமையில் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய வாலிபரை தேடி வருகின்றனர்.


கோவை: கோவையில் கடையில் வேலை பார்க்கக்கூடிய சக ஊழியரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற கடை ஊழியரை போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்தவர் அன்புவேல் (30). இவர் சிங்காநல்லூரில் உள்ள துணிக்கடை ஒன்றில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மழை பெய்ததால் சக ஊழியர்கள் வீட்டுக்குச் சென்று விட்டனர். அந்த சமயம் பார்த்து, அந்த ஊழியர் கடையில் பணியாற்றும் 24 வயது இளம் பெண்ணை கடையில் பணியாற்றக் கூடிய மற்றொரு ஊழியர் பலாத்காரம் செய்ய முயன்றார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கூச்சலிட்டார். இதற்கிடையே பெண்ணின் தந்தை மகளை அழைத்துச் செல்வதற்காக வந்துள்ளார். இதையடுத்து, சுதாரித்துக்கொண்ட அன்புவேல் அவர்களை மிரட்டி, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

பின்னர், இது தொடர்பாக கோவை கிழக்கு பகுதி அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் தவ்லத் நிஸா தலைமையில் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய வாலிபரை தேடி வருகின்றனர்.

Newsletter

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...