கோவை கிணத்துக்கடவு அருகே வாலிபரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது - 3 பேர் தலைமறைவு..!!

கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பொள்ளாச்சி கிளை சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே வாலிபரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள 3 பேரை தேடி வருகின்றனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள சென்றாம்பாளையம் கருப்பராயன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் வீராச்சாமி(21). இவரது தம்பி குணசேகரன்(19) நேற்று மாலை தனது இரு சக்கர வாகனத்தில் அப்பகுதியில் உள்ள மளிகை கடைக்கு பொருட்கள் வாங்க வந்துவிட்டு திரும்பிச்செல்ல வாகனத்தை ஸ்டார்ட் செய்து கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த மணிவண்ணன் (26), சுரேந்திரன்(23), மிலன், வசந்தகுமார், விஜய் ஆனந்த் ஆகிய 5 பேர் குணசேகரனை பார்த்து முறைத்துக் கொண்டே வண்டி ஏன் ஸ்டார்ட் செய்கிறாய் என்று கேட்டு தாக்கியுள்ளனர்.

பின்னர், அருகிலிருந்த குணசேகரனின் அண்ணன் வீராச்சாமி அக்காள் மாரியம்மாள் (28) இருவரும் வந்து தடுத்த போது அவர்களையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதில் காயமடைந்த குணசேகரன் மற்றும் மாரியம்மாள் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து குணசேகரனின் அண்ணன் வீராசாமி கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குணசேகரன் மீது தாக்குதல் நடத்திய மணிவண்ணன் மற்றும் சுரேந்திரன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் 3 பேர் தலைமறைவாக உள்ளனர்.

இதையடுத்து, கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பொள்ளாச்சி கிளை சிறையில் அடைத்தனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...