கோவை கிணத்துக்கடவு அருகே வாலிபரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது - 3 பேர் தலைமறைவு..!!

கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பொள்ளாச்சி கிளை சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே வாலிபரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள 3 பேரை தேடி வருகின்றனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள சென்றாம்பாளையம் கருப்பராயன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் வீராச்சாமி(21). இவரது தம்பி குணசேகரன்(19) நேற்று மாலை தனது இரு சக்கர வாகனத்தில் அப்பகுதியில் உள்ள மளிகை கடைக்கு பொருட்கள் வாங்க வந்துவிட்டு திரும்பிச்செல்ல வாகனத்தை ஸ்டார்ட் செய்து கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த மணிவண்ணன் (26), சுரேந்திரன்(23), மிலன், வசந்தகுமார், விஜய் ஆனந்த் ஆகிய 5 பேர் குணசேகரனை பார்த்து முறைத்துக் கொண்டே வண்டி ஏன் ஸ்டார்ட் செய்கிறாய் என்று கேட்டு தாக்கியுள்ளனர்.

பின்னர், அருகிலிருந்த குணசேகரனின் அண்ணன் வீராச்சாமி அக்காள் மாரியம்மாள் (28) இருவரும் வந்து தடுத்த போது அவர்களையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதில் காயமடைந்த குணசேகரன் மற்றும் மாரியம்மாள் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து குணசேகரனின் அண்ணன் வீராசாமி கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குணசேகரன் மீது தாக்குதல் நடத்திய மணிவண்ணன் மற்றும் சுரேந்திரன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் 3 பேர் தலைமறைவாக உள்ளனர்.

இதையடுத்து, கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பொள்ளாச்சி கிளை சிறையில் அடைத்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...