திருப்பூர் குமரனின் நினைவாக நிழல் குடை மற்றும் நினைவு வளைவு அமைக்கும் பணி விரைவில் நிறைவேற்றப்படும்- செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் உறுதி!

திருப்பூரில் கொடிக்கொத்த குமரனின் நினைவாக அரசு உத்தரவோடு நிழல் குடை மற்றும் நினைவு வளைவு அமைக்கும் பணி விரைவில் நிறைவேற்றப்படும் என செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் உறுதியளித்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூரில் சுதந்திரப் போராட்ட வீரரான கொடிக்காத்தக் குமரனின் 118வது பிறந்த நாள் விழா இன்று அரசு மரியாதையுடன் கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில் திருப்பூர் ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள திருப்பூர் குமரன் நினைவிடத்தில் அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் கலந்துக்கொண்டு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.



இந்நிகழ்வில் மாநில செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன், தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான ஆட்சிப்பொறுப்பேற்றவுடன், தமிழகம் முழுவதும் உள்ள சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்பட்டுவருவதாக தெரிவித்தார்.

மேலும் 75 ஆவது சுதந்திர தின விழாவில் தெரிவித்துள்ள படி, தமிழகத்தில் சுதந்திரப்போரட்ட வீரர்களுக்கு மணிமண்டபம் மற்றும் சிலைகள் நிறுவி அவர்களுக்கு உரிய மரியாதையை திமுக அரசு மேற்கொண்டுவருகிறது.

எனவே இதன்படி, திருப்பூரில் கொடிக்காத்தக் குமரனின் நினைவாக நிழல் குடை மற்றும் நினைவு வளைவு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் நிறைவேற்றப்படும் என அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

Newsletter

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...