திருப்பூர் குமரனின் நினைவாக நிழல் குடை மற்றும் நினைவு வளைவு அமைக்கும் பணி விரைவில் நிறைவேற்றப்படும்- செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் உறுதி!

திருப்பூரில் கொடிக்கொத்த குமரனின் நினைவாக அரசு உத்தரவோடு நிழல் குடை மற்றும் நினைவு வளைவு அமைக்கும் பணி விரைவில் நிறைவேற்றப்படும் என செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் உறுதியளித்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூரில் சுதந்திரப் போராட்ட வீரரான கொடிக்காத்தக் குமரனின் 118வது பிறந்த நாள் விழா இன்று அரசு மரியாதையுடன் கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில் திருப்பூர் ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள திருப்பூர் குமரன் நினைவிடத்தில் அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் கலந்துக்கொண்டு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.



இந்நிகழ்வில் மாநில செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன், தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான ஆட்சிப்பொறுப்பேற்றவுடன், தமிழகம் முழுவதும் உள்ள சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்பட்டுவருவதாக தெரிவித்தார்.

மேலும் 75 ஆவது சுதந்திர தின விழாவில் தெரிவித்துள்ள படி, தமிழகத்தில் சுதந்திரப்போரட்ட வீரர்களுக்கு மணிமண்டபம் மற்றும் சிலைகள் நிறுவி அவர்களுக்கு உரிய மரியாதையை திமுக அரசு மேற்கொண்டுவருகிறது.

எனவே இதன்படி, திருப்பூரில் கொடிக்காத்தக் குமரனின் நினைவாக நிழல் குடை மற்றும் நினைவு வளைவு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் நிறைவேற்றப்படும் என அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...