திருப்பூரில் கொடிக்கொத்த குமரனின் நினைவாக அரசு உத்தரவோடு நிழல் குடை மற்றும் நினைவு வளைவு அமைக்கும் பணி விரைவில் நிறைவேற்றப்படும் என செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் உறுதியளித்துள்ளார்.
திருப்பூர்: திருப்பூரில் சுதந்திரப் போராட்ட வீரரான கொடிக்காத்தக் குமரனின் 118வது பிறந்த நாள் விழா இன்று அரசு மரியாதையுடன் கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில் திருப்பூர் ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள திருப்பூர் குமரன் நினைவிடத்தில் அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் கலந்துக்கொண்டு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

இந்நிகழ்வில் மாநில செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன், தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான ஆட்சிப்பொறுப்பேற்றவுடன், தமிழகம் முழுவதும் உள்ள சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்பட்டுவருவதாக தெரிவித்தார்.
மேலும் 75 ஆவது சுதந்திர தின விழாவில் தெரிவித்துள்ள படி, தமிழகத்தில் சுதந்திரப்போரட்ட வீரர்களுக்கு மணிமண்டபம் மற்றும் சிலைகள் நிறுவி அவர்களுக்கு உரிய மரியாதையை திமுக அரசு மேற்கொண்டுவருகிறது.
எனவே இதன்படி, திருப்பூரில் கொடிக்காத்தக் குமரனின் நினைவாக நிழல் குடை மற்றும் நினைவு வளைவு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் நிறைவேற்றப்படும் என அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
இவ்விழாவில் திருப்பூர் ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள திருப்பூர் குமரன் நினைவிடத்தில் அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் கலந்துக்கொண்டு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
இந்நிகழ்வில் மாநில செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன், தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான ஆட்சிப்பொறுப்பேற்றவுடன், தமிழகம் முழுவதும் உள்ள சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்பட்டுவருவதாக தெரிவித்தார்.
மேலும் 75 ஆவது சுதந்திர தின விழாவில் தெரிவித்துள்ள படி, தமிழகத்தில் சுதந்திரப்போரட்ட வீரர்களுக்கு மணிமண்டபம் மற்றும் சிலைகள் நிறுவி அவர்களுக்கு உரிய மரியாதையை திமுக அரசு மேற்கொண்டுவருகிறது.
எனவே இதன்படி, திருப்பூரில் கொடிக்காத்தக் குமரனின் நினைவாக நிழல் குடை மற்றும் நினைவு வளைவு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் நிறைவேற்றப்படும் என அமைச்சர் உறுதியளித்துள்ளார்.