கோவையில் போதைப் பொருள் தடுப்பு குறித்த நிகழ்ச்சி..! மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார்..!!

மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் இன்று முதல் வரும் 8ம் தேதி வரை 10 நாடக குழுவை சேர்ந்தவர்கள் போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர்.


கோவை: கொரோனா பரவல் காரணமாக நிறுத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மீண்டும் ஒரு வருடத்திற்குப் பிறகு இன்று துவங்கியுள்ளது.

கோவை மாவட்ட கலால் துறை சார்பில், மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் போதை பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் கொரோனா பரவல் அச்சத்தின் காரணமாக கடந்த ஒரு வருடங்களாக இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் எதுவும் நடத்தப்படவில்லை. தற்போது கோவை மாவட்டத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்த நிலையில் மீண்டும் இன்று விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடக்க துவங்கியது.



அதன் ஒரு பகுதியாக, போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை சுமார் 11 மணி அளவில் நடத்தப்பட்டது. இதனை மாவட்ட ஆட்சியர் சமீரன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.



கோவை மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் இன்று முதல் வரும் 8ம் தேதி வரை 10 நாடக குழுவை சேர்ந்தவர்கள் போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர்.



இதில் போதைப் பொருளால் ஏற்படும் பாதிப்புகள், விளைவுகள் ஆகியவை குறித்து விழிப்புணர்வு செய்ய உள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...