மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் இன்று முதல் வரும் 8ம் தேதி வரை 10 நாடக குழுவை சேர்ந்தவர்கள் போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர்.
கோவை: கொரோனா பரவல் காரணமாக நிறுத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மீண்டும் ஒரு வருடத்திற்குப் பிறகு இன்று துவங்கியுள்ளது.
கோவை மாவட்ட கலால் துறை சார்பில், மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் போதை பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் கொரோனா பரவல் அச்சத்தின் காரணமாக கடந்த ஒரு வருடங்களாக இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் எதுவும் நடத்தப்படவில்லை. தற்போது கோவை மாவட்டத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்த நிலையில் மீண்டும் இன்று விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடக்க துவங்கியது.

அதன் ஒரு பகுதியாக, போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை சுமார் 11 மணி அளவில் நடத்தப்பட்டது. இதனை மாவட்ட ஆட்சியர் சமீரன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

கோவை மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் இன்று முதல் வரும் 8ம் தேதி வரை 10 நாடக குழுவை சேர்ந்தவர்கள் போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர்.

இதில் போதைப் பொருளால் ஏற்படும் பாதிப்புகள், விளைவுகள் ஆகியவை குறித்து விழிப்புணர்வு செய்ய உள்ளனர்.
கோவை மாவட்ட கலால் துறை சார்பில், மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் போதை பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் கொரோனா பரவல் அச்சத்தின் காரணமாக கடந்த ஒரு வருடங்களாக இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் எதுவும் நடத்தப்படவில்லை. தற்போது கோவை மாவட்டத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்த நிலையில் மீண்டும் இன்று விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடக்க துவங்கியது.
அதன் ஒரு பகுதியாக, போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை சுமார் 11 மணி அளவில் நடத்தப்பட்டது. இதனை மாவட்ட ஆட்சியர் சமீரன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
கோவை மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் இன்று முதல் வரும் 8ம் தேதி வரை 10 நாடக குழுவை சேர்ந்தவர்கள் போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர்.
இதில் போதைப் பொருளால் ஏற்படும் பாதிப்புகள், விளைவுகள் ஆகியவை குறித்து விழிப்புணர்வு செய்ய உள்ளனர்.