வங்கக்கடலில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் கோவை, நீலகிரி, உட்பட 16-மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தகவல்.
கோவை: தமிழகம் முழுதும் 16-மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்து உள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு கூறியிருப்பதாவது:-
தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய தமிழக கடற்பகுதிகளில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் மிகக் கன மழை பெய்யும்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, கோவை, நீலகிரி, ஈரோடு, மதுரை, விருதுநகர், திருச்சி மாவட்டங்களில் கன மழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். தென் மாவட்டங்கள், அரியலுார், பெரம்பலுார், கடலுார், தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில், நாளை ஓரிரு இடங்களில் மிகக் கன மழை பெய்யும்.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கரூர், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கன மழை பெய்யும் சென்னையில் இன்று வானம் மேகமூட்டமாகக் காணப்படும்.
சில இடங்களில் லேசான மழை பெய்யும். நேற்று காலை நிலவரப்படி, 24-மணி நேரத்தில் மாநிலத்தில் அதிகபட்சமாகக் கன்னியாகுமரியில் 10-செ.மீ., மழை பெய்துள்ளது. மத்திய அரபிக் கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில், மணிக்கு 50-கி.மீ., வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும்.
எனவே, 7-ம் தேதி வரை இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு கூறியிருப்பதாவது:-
தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய தமிழக கடற்பகுதிகளில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் மிகக் கன மழை பெய்யும்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, கோவை, நீலகிரி, ஈரோடு, மதுரை, விருதுநகர், திருச்சி மாவட்டங்களில் கன மழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். தென் மாவட்டங்கள், அரியலுார், பெரம்பலுார், கடலுார், தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில், நாளை ஓரிரு இடங்களில் மிகக் கன மழை பெய்யும்.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கரூர், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கன மழை பெய்யும் சென்னையில் இன்று வானம் மேகமூட்டமாகக் காணப்படும்.
சில இடங்களில் லேசான மழை பெய்யும். நேற்று காலை நிலவரப்படி, 24-மணி நேரத்தில் மாநிலத்தில் அதிகபட்சமாகக் கன்னியாகுமரியில் 10-செ.மீ., மழை பெய்துள்ளது. மத்திய அரபிக் கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில், மணிக்கு 50-கி.மீ., வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும்.
எனவே, 7-ம் தேதி வரை இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.