16-மாவட்டங்களில் இன்று "மழை வரப்போகுது...!" - குடை எடுத்துட்டு போங்க மக்களே..!

வங்கக்கடலில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் கோவை, நீலகிரி, உட்பட 16-மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தகவல்.


கோவை: தமிழகம் முழுதும் 16-மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்து உள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு கூறியிருப்பதாவது:-

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய தமிழக கடற்பகுதிகளில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் மிகக் கன மழை பெய்யும்.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, கோவை, நீலகிரி, ஈரோடு, மதுரை, விருதுநகர், திருச்சி மாவட்டங்களில் கன மழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். தென் மாவட்டங்கள், அரியலுார், பெரம்பலுார், கடலுார், தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில், நாளை ஓரிரு இடங்களில் மிகக் கன மழை பெய்யும்.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கரூர், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கன மழை பெய்யும் சென்னையில் இன்று வானம் மேகமூட்டமாகக் காணப்படும்.

சில இடங்களில் லேசான மழை பெய்யும். நேற்று காலை நிலவரப்படி, 24-மணி நேரத்தில் மாநிலத்தில் அதிகபட்சமாகக் கன்னியாகுமரியில் 10-செ.மீ., மழை பெய்துள்ளது. மத்திய அரபிக் கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில், மணிக்கு 50-கி.மீ., வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும்.

எனவே, 7-ம் தேதி வரை இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...