மனுவில் தொலைபேசி எண் குறிப்பிடப்பட வேண்டும் எனவும் சமூக இடைவெளி, முக கவசம் அணிதல் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை: கோவையில் கொரோனா தொற்று பாதிப்புக்குப் பிறகு முதல் முறையாக, மக்கள் குறைதீர் கூட்டம், இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.
தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, மாவட்டங்களில் மக்கள் குறைதீர் கூட்டம், விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை ரத்து செய்து அரசு உத்தரவிட்டது. இதனால் குறைதீர் கூட்டம் அனைத்தும் வீடியோ கான்பரன்சிங் மூலம் நடத்தப்பட்டன.
இதனிடையே, தற்போது தொற்று குறைந்துள்ள சூழலில், மீண்டும் நேரடியாக குறைதீர் கூட்டங்களை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி திங்கள்தோறும் நடக்கும் மக்கள் குறைதீர் கூட்டம் இன்று காலை, 10:00 மணிக்கு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சமீரன் வெளியிட்ட அறிக்கையில், 'கொரோனா தடுப்பு வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்றி குறைதீர் கூட்டங்களில் பொதுமக்கள் பங்கேற்கலாம். மனுவில் தொலைபேசி எண் குறிப்பிடப்பட வேண்டும். சமூக இடைவெளி, முக கவசம் அணிதல் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.
தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, மாவட்டங்களில் மக்கள் குறைதீர் கூட்டம், விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை ரத்து செய்து அரசு உத்தரவிட்டது. இதனால் குறைதீர் கூட்டம் அனைத்தும் வீடியோ கான்பரன்சிங் மூலம் நடத்தப்பட்டன.
இதனிடையே, தற்போது தொற்று குறைந்துள்ள சூழலில், மீண்டும் நேரடியாக குறைதீர் கூட்டங்களை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி திங்கள்தோறும் நடக்கும் மக்கள் குறைதீர் கூட்டம் இன்று காலை, 10:00 மணிக்கு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சமீரன் வெளியிட்ட அறிக்கையில், 'கொரோனா தடுப்பு வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்றி குறைதீர் கூட்டங்களில் பொதுமக்கள் பங்கேற்கலாம். மனுவில் தொலைபேசி எண் குறிப்பிடப்பட வேண்டும். சமூக இடைவெளி, முக கவசம் அணிதல் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.