சிறுவாணி அணை நீர்மட்டம் 42.50 அடியாக உயர்வு.!!!

கோவை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது சிறுவாணி ஆகும். மேற்குத் தொடர்ச்சி மலையில் கடந்த சில வாரங்களாகப் பெய்து வரும் கனமழையால் சிறுவாணி அணையின் நீர்மட்டம் 42.50-அடியாக உயர்ந்துள்ளது.


கோவை: கோவை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது சிறுவாணி ஆகும். மேற்குத் தொடர்ச்சி மலையில் கடந்த சில வாரங்களாகப் பெய்து வரும் கனமழையால் சிறுவாணி அணையின் நீர்மட்டம் 42.50- அடியாக உயர்ந்துள்ளது.

கடந்த மாத தொடக்கத்திலிருந்து சிறுவாணி அணை நீர்பிடிப்பு பகுதியில் மழை பொழிவு தொடர்ந்து காணப்படுகிறது. நீராதாரமாகக் காணப்படும் அருவிகளிலிருந்து நீர்வரத்து காணப்படுகிறது. இதன் முத்திக் குளம், பட்டியாறு பாம்பாறு, உள்ளிட்ட அருவிகளிலிருந்தும் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.

இதனால் கடந்த மாதம் தொடக்கத்தில் 41-அடியாக இருந்த நீர்மட்டம் தற்போது ஒரு மீட்டர் உயர்ந்து தொடர்ந்து 42-அடியாக உள்ளது. இன்று காலை நிலவரப்படி சிறுவாணி அணையின் நீர்மட்டம் 42.50-அடியாக உயர்ந்து இருக்கிறது. அணையின் முழு கொள்ளளவு 50-அடி ஆகும்.

பாதுகாப்பு காரணங்களைக் கூறி சில ஆண்டுகளாகவே கேரள அரசு 45-அடி நீர் இருப்பு வைத்து வருகிறது. இதனால் அணை முழு கொள்ளளவை எட்டுவது இல்லை என்பது நிதர்சனமான உண்மை.

Newsletter

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...