கோவையில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற கிராமசபைக்கூட்டங்களில் மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்றதோடு, சாலை வசதிகள் போன்ற அடிப்படைப்பிரச்சனைகளை மேம்படுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
கோவை: கொரோனா தொற்றின் தாக்கம் சற்று குறைந்துள்ள நிலையில் தமிழகம் முழுவதும் அக்டோபர் 2 ஆம் தேதி கிராமசபைக்கூட்டங்களை, பாதுகாப்பு விதிமுறைகளோடு நடத்திக்கொள்ளலாம் என தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதன்படி, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் கிராமச்சபை கூட்டம் என்பதால் அதிகளவிலான ஆர்வம் மக்களிடையே காணப்பட்டது. கோயம்புத்தூர் மாவட்டத்தைப்பொறுத்தவரை இடைத்தேர்தல் நடைபெறும் 33 கிராம ஊராட்சிகளைத்தவிர்த்து அனைத்து இடங்களிலும் இன்று வெகுசிறப்பாக கிராம சபைக்கூட்டங்கள் நடைபெற்றுள்ளது.
குறிப்பாக கிணத்துக்கடவு பகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் முத்தூர் ஊரட்சியின் கூட்டம் நடத்தப்படவில்லை. ஆனால் மீதமுள்ள 33 கிராம ஊராட்சிகளில் அந்தந்த ஊராட்சி மன்றத்தலைவர் தலைமையில் கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது.

கோதவாடி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ரத்தினசாமி தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் வார்டு கவுன்சிலர்கள் கிராம மக்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

மேலும் இந்தக்கூட்டத்தில் சாலை வசதி, தண்ணீா் வசதி போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் எனவும், கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் தமிழக அரசு பின்பற்ற சொன்ன விதிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என்றும் கிராமசபைக் கூட்டங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதேபோல் குருநல்லிபாளையம், கோவிந்தனூர் ஆகிய கிராமங்களில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டங்களில் கிணத்துக்கடவு வட்டாட்சியர் சசிரேகா உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அதன்படி, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் கிராமச்சபை கூட்டம் என்பதால் அதிகளவிலான ஆர்வம் மக்களிடையே காணப்பட்டது. கோயம்புத்தூர் மாவட்டத்தைப்பொறுத்தவரை இடைத்தேர்தல் நடைபெறும் 33 கிராம ஊராட்சிகளைத்தவிர்த்து அனைத்து இடங்களிலும் இன்று வெகுசிறப்பாக கிராம சபைக்கூட்டங்கள் நடைபெற்றுள்ளது.
குறிப்பாக கிணத்துக்கடவு பகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் முத்தூர் ஊரட்சியின் கூட்டம் நடத்தப்படவில்லை. ஆனால் மீதமுள்ள 33 கிராம ஊராட்சிகளில் அந்தந்த ஊராட்சி மன்றத்தலைவர் தலைமையில் கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது.
கோதவாடி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ரத்தினசாமி தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் வார்டு கவுன்சிலர்கள் கிராம மக்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.
மேலும் இந்தக்கூட்டத்தில் சாலை வசதி, தண்ணீா் வசதி போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் எனவும், கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் தமிழக அரசு பின்பற்ற சொன்ன விதிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என்றும் கிராமசபைக் கூட்டங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதேபோல் குருநல்லிபாளையம், கோவிந்தனூர் ஆகிய கிராமங்களில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டங்களில் கிணத்துக்கடவு வட்டாட்சியர் சசிரேகா உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.