முகாமில் கொரானா தடுப்பூசி போட வருபவர்களுக்கு ரத்த அழுத்தப் பரிசோதனை, சர்க்கரை அளவு பரிசோதனையும் மேற்கொள்ளப்படுகிறது. வால்பாறையில் உள்ள அனைத்துப் பகுதி மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வால்பாறை: வால்பாறை வட்டார பகுதியில் கொரோனா தடுப்பூசி மெகா முகாமை வால்பாறை வட்டார வளமைய தலைமை மருத்துவர் ஆய்வு செய்தார்.
கோவை மாவட்டம் வால்பாறையில் தமிழக அரசு அறிவித்துள்ள மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்படி வால்பாறை பகுதியில் உள்ள அனைத்து தேயிலைத் தோட்டங்கள், வால்பாறை அரசு மருத்துவமனை, வால்பாறை அரசு ஆரம்பச் சுகாதார நிலையம், முடீஸ் அரசு ஆரம்பச் சுகாதார நிலையம், சோலையாறு நகர் அரசு ஆரம்பச் சுகாதார நிலையம் அனைவருக்கும் தடுப்பூசி என்ற அடிப்படையில் கொரோனா தடுப்பூசி மெகா முகாம் 18-மையங்களில் நடைபெற்று வருகிறது.
மேலும் இந்த முகாமில் கொரோனா தடுப்பூசி போட வருபவர்களுக்கு ரத்த அழுத்தப் பரிசோதனை, சர்க்கரை அளவு பரிசோதனையும் மேற்கொள்ளப்படுகிறது. இதன்மூலம் வால்பாறையில் உள்ள அனைத்துப் பகுதி மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
காலை 7-மணி முதல் இரவு 7-மணி வரை 18-வயதிற்கு மேற்பட்டவர்களுக்குக் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.

இந்நிலையில் வால்பாறையிலுள்ள சோலையாறு நகர் அரசு ஆரம்பச் சுகாதார நிலையம், பழைய வால்பாறை தேயிலைத் தோட்ட மருத்துவமனை, கருமலை தேயிலைத் தோட்ட மருத்துவமனை மற்றும் வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை வால்பாறை வட்டார வள மைய தலைமை மருத்துவர் பாபு லட்சுமணன் நேரில் ஆய்வு செய்தார்.

கோவை மாவட்டம் வால்பாறையில் தமிழக அரசு அறிவித்துள்ள மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்படி வால்பாறை பகுதியில் உள்ள அனைத்து தேயிலைத் தோட்டங்கள், வால்பாறை அரசு மருத்துவமனை, வால்பாறை அரசு ஆரம்பச் சுகாதார நிலையம், முடீஸ் அரசு ஆரம்பச் சுகாதார நிலையம், சோலையாறு நகர் அரசு ஆரம்பச் சுகாதார நிலையம் அனைவருக்கும் தடுப்பூசி என்ற அடிப்படையில் கொரோனா தடுப்பூசி மெகா முகாம் 18-மையங்களில் நடைபெற்று வருகிறது.
மேலும் இந்த முகாமில் கொரோனா தடுப்பூசி போட வருபவர்களுக்கு ரத்த அழுத்தப் பரிசோதனை, சர்க்கரை அளவு பரிசோதனையும் மேற்கொள்ளப்படுகிறது. இதன்மூலம் வால்பாறையில் உள்ள அனைத்துப் பகுதி மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
காலை 7-மணி முதல் இரவு 7-மணி வரை 18-வயதிற்கு மேற்பட்டவர்களுக்குக் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.
இந்நிலையில் வால்பாறையிலுள்ள சோலையாறு நகர் அரசு ஆரம்பச் சுகாதார நிலையம், பழைய வால்பாறை தேயிலைத் தோட்ட மருத்துவமனை, கருமலை தேயிலைத் தோட்ட மருத்துவமனை மற்றும் வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை வால்பாறை வட்டார வள மைய தலைமை மருத்துவர் பாபு லட்சுமணன் நேரில் ஆய்வு செய்தார்.