கோவையில் சாலையில் சுற்றித்திரியும் ஆடு, மாடுகளால் அதிகரிக்கும் விபத்துக்கள்; மாநகராட்சி நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை!

கோவையில் முக்கியச்சாலைகளில் சுற்றித்திரியும் ஆடு, மாடுகளால் தொடர்ந்து விபத்துக்கள் நடப்பதால், இதுக்குறித்து நடவடிக்கை எடுக்க மாநகராட்சி அதிகாரிகளுக்கு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


கோவை: கோவை ராமநாதபுரம் 80 அடி சாலையில் வைக்கப்பட்டுள்ள குப்பைத்தொட்டியை முறையாக அப்புறப்படுத்துவதில்லை. இதனால்குப்பைத்தொட்டி முழுவதுமாக நிறைந்து விடுவதால், இதில் உள்ளக் கழிவுகளை உண்பதற்காக கூட்டம், கூட்டமாக ஆடுகள் மற்றும் மாடுகள் அப்பகுதிக்கு வருகின்றன. மேலும் அதேப்பகுதியில் சுற்றித்திரிவதன் காரணமாக அவ்வழியாக வரும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அப்பகுதியைக் கடக்க முடியாத நிலை உள்ளது.

மேலும் இதனால் சில நேரங்களில் விபத்துக்களும் அதிகரிக்கிறது. இதுக்குறித்து பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டினை அப்பகுதி மக்கள் முன்வைக்கின்றனர். எனவே இனிவரும் காலங்களில் அதிகப்படியான விபத்துகள் ஏற்படாமல் இருக்கும் வகையில் மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் கால்நடை உரிமையாளர்களைக் கண்டறிந்து அபராதம் விதிப்பதுடன், அவற்றை வளர்ப்பு கொட்டகையில் கட்டி வைத்து வளர்க்க அறிவுறுத்த வேண்டும் என கூறியுள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...