கோவையில் சாலையில் சுற்றித்திரியும் ஆடு, மாடுகளால் அதிகரிக்கும் விபத்துக்கள்; மாநகராட்சி நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை!

கோவையில் முக்கியச்சாலைகளில் சுற்றித்திரியும் ஆடு, மாடுகளால் தொடர்ந்து விபத்துக்கள் நடப்பதால், இதுக்குறித்து நடவடிக்கை எடுக்க மாநகராட்சி அதிகாரிகளுக்கு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


கோவை: கோவை ராமநாதபுரம் 80 அடி சாலையில் வைக்கப்பட்டுள்ள குப்பைத்தொட்டியை முறையாக அப்புறப்படுத்துவதில்லை. இதனால்குப்பைத்தொட்டி முழுவதுமாக நிறைந்து விடுவதால், இதில் உள்ளக் கழிவுகளை உண்பதற்காக கூட்டம், கூட்டமாக ஆடுகள் மற்றும் மாடுகள் அப்பகுதிக்கு வருகின்றன. மேலும் அதேப்பகுதியில் சுற்றித்திரிவதன் காரணமாக அவ்வழியாக வரும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அப்பகுதியைக் கடக்க முடியாத நிலை உள்ளது.

மேலும் இதனால் சில நேரங்களில் விபத்துக்களும் அதிகரிக்கிறது. இதுக்குறித்து பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டினை அப்பகுதி மக்கள் முன்வைக்கின்றனர். எனவே இனிவரும் காலங்களில் அதிகப்படியான விபத்துகள் ஏற்படாமல் இருக்கும் வகையில் மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் கால்நடை உரிமையாளர்களைக் கண்டறிந்து அபராதம் விதிப்பதுடன், அவற்றை வளர்ப்பு கொட்டகையில் கட்டி வைத்து வளர்க்க அறிவுறுத்த வேண்டும் என கூறியுள்ளனர்.

Newsletter

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...