கோவையில் திருநங்கைகளின் மறுவாழ்வுக்காக 'சிகரம் தொடு' திட்டம் - மாவட்ட எஸ்பி தகவல்..!

வீடு இல்லாத திருநங்கைகள் தங்குவதற்கு, மூன்று விடுதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கல்வி தகுதிக்கேற்ப, வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்படும் என மாவட்ட எஸ்பி தெரிவித்தார்.



கோவை: கோவையில் திருநங்கைகளின் மறுவாழ்வுக்காக, கோவை மாவட்ட போலீசார் மூன்று திட்டங்களை வகுத்துள்ளதாக மாவட்ட எஸ்பி செல்வநாகரத்தினம் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில், சிக்னல்களில் நின்று பணம் கேட்கும் திருநங்கைகளில் சிலர், தராதவர்களை தகாத வார்த்தைகளால் திட்டுவது, ஆபாசமாக நடப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவதாக போலீசாரிடம் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இதை தடுக்கும் பொருட்டும், திருநங்கைகளுக்கு சமூகத்தில் நன்மதிப்பை பெற்றுத் தரும் பொருட்டும், கோவை மாவட்ட போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக, திருநங்கைகளின் மறுவாழ்வுக்காக, சிறப்பு திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

இது குறித்து எஸ்.பி., செல்வ நாகரத்தினம் கூறியதாவது:-

திருநங்கைகள் மறுவாழ்வுக்காக, 'சிகரம் தொடு' எனும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. வீடில்லாத திருநங்கைகள் தங்குவதற்கு, மூன்று விடுதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

திருநங்கைகளில் பலர், கல்வியறிவுடன் உள்ளனர். கல்வி தகுதிக்கேற்ப, வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும். அதற்கான வேலைவாய்ப்பு முகாம் விரைவில் நடத்தப்பட உள்ளது. அவர்களுக்கு தெரிந்த தொழிலில் பயிற்சி அளித்து, அவற்றில் ஈடுபடுத்த உள்ளோம்.

இவை தவிர, ஹவுஸ் கீப்பிங், சமையல் கலை, ஓட்டல்களில் சர்வர் ஆகியவற்றிலும் அவர்களை ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளோம். பல்வேறு திறமைகளை கொண்டுள்ள, 40 திருநங்கைகள் எங்களை தொடர்பு கொண்டுள்ளனர்.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Newsletter

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...