கோவை விமானநிலையப் பின்புறத்தில் அழுகிய நிலையில் 65 வயதான ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. எனவே யாரும் காணாமல் போய் இருந்தால் சிங்காநல்லூர் காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட வேண்டும்.
கோவை: கோவையில் இன்று காலை 9 மணியளவில் SIHS காலனி, ஶ்ரீ மூகாம்பிகை அம்மன் நகர், வேட்டைக் காரன் கோவில் தெரு அருகில் அதாவது கோவை விமானநிலையம் பின்புறப் பகுதியில் உள்ள முள்வேளியில் 65 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று அழுகிய நிலையில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த சிங்காநல்லூர் போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையும் நடத்திவருகின்றனர்.
மேலும் உயிரிழந்தவரின் உடல் அழுகிய நிலையில் இருப்பதால் சரியாக அடையாளம் காணப்படவில்லை. எனவே கோவை மாநகர மற்றும் மாவட்ட பகுதிகளில் காணாமல் போனவர்கள் எவரேனும் இருந்தால் அவருடைய உறவினர்கள் சிங்காநல்லூர் காவல் நிலையத்தை அல்லது 9498101145, Inspector 9498173999 இந்த எண்ணிற்கு உடனடியாக தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்