கோவை விமானநிலையப் பின்புறத்தில் அழுகிய நிலையில் 65 வயதான ஆண் சடலம் கண்டெடுப்பு; போலீசார் விசாரணை!

கோவை விமானநிலையப் பின்புறத்தில் அழுகிய நிலையில் 65 வயதான ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. எனவே யாரும் காணாமல் போய் இருந்தால் சிங்காநல்லூர் காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட வேண்டும்.



கோவை: கோவையில் இன்று காலை 9 மணியளவில் SIHS காலனி, ஶ்ரீ மூகாம்பிகை அம்மன் நகர், வேட்டைக் காரன் கோவில் தெரு அருகில் அதாவது கோவை விமானநிலையம் பின்புறப் பகுதியில் உள்ள முள்வேளியில் 65 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று அழுகிய நிலையில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த சிங்காநல்லூர் போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையும் நடத்திவருகின்றனர்.

மேலும் உயிரிழந்தவரின் உடல் அழுகிய நிலையில் இருப்பதால் சரியாக அடையாளம் காணப்படவில்லை. எனவே கோவை மாநகர மற்றும் மாவட்ட பகுதிகளில் காணாமல் போனவர்கள் எவரேனும் இருந்தால் அவருடைய உறவினர்கள் சிங்காநல்லூர் காவல் நிலையத்தை அல்லது 9498101145, Inspector 9498173999 இந்த எண்ணிற்கு உடனடியாக தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...