திருப்பூரில் அரசு மதுபானக்கடை அருகே சாக்கடையில் அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை மீட்பு - போலீசார் விசாரணை..!

அரசு மதுபானக்கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் அரசு மதுபானக் கடைக்கு அருகாமையில் சாக்கடையில் கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் கொங்கனகிரி மூன்றாவது வீதியில் அரசு மதுபான கடை செயல்பட்டு வரக்கூடிய சூழ்நிலையில் இன்று காலை வீட்டிற்கு வெளியே அடையாளம் தெரியாத நபர் சாக்கடையில் பிணமாக கிடந்துள்ளார்.



இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் அளித்ததையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பிரேதத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்து இறந்து கிடந்தவர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பொது மக்கள் குடியிருப்பு மிகுந்த பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடையில் தினந்தோறும் இரவு நேரங்களில் குடித்துவிட்டு வீட்டிற்கு வாசலிலேயே குடிபோதை நபர்கள் படுத்து உறங்கி விடுவதாகவும் இது போல ஒரு சிலர் இறந்து விடுவது வாடிக்கையாக நிகழ்ந்து வருவதால் அரசு மதுபானக்கடையை அகற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...