அரசு மதுபானக்கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
திருப்பூர்: திருப்பூர் அரசு மதுபானக் கடைக்கு அருகாமையில் சாக்கடையில் கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் கொங்கனகிரி மூன்றாவது வீதியில் அரசு மதுபான கடை செயல்பட்டு வரக்கூடிய சூழ்நிலையில் இன்று காலை வீட்டிற்கு வெளியே அடையாளம் தெரியாத நபர் சாக்கடையில் பிணமாக கிடந்துள்ளார்.

இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் அளித்ததையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பிரேதத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்து இறந்து கிடந்தவர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பொது மக்கள் குடியிருப்பு மிகுந்த பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடையில் தினந்தோறும் இரவு நேரங்களில் குடித்துவிட்டு வீட்டிற்கு வாசலிலேயே குடிபோதை நபர்கள் படுத்து உறங்கி விடுவதாகவும் இது போல ஒரு சிலர் இறந்து விடுவது வாடிக்கையாக நிகழ்ந்து வருவதால் அரசு மதுபானக்கடையை அகற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
திருப்பூர் கொங்கனகிரி மூன்றாவது வீதியில் அரசு மதுபான கடை செயல்பட்டு வரக்கூடிய சூழ்நிலையில் இன்று காலை வீட்டிற்கு வெளியே அடையாளம் தெரியாத நபர் சாக்கடையில் பிணமாக கிடந்துள்ளார்.
இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் அளித்ததையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பிரேதத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்து இறந்து கிடந்தவர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பொது மக்கள் குடியிருப்பு மிகுந்த பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடையில் தினந்தோறும் இரவு நேரங்களில் குடித்துவிட்டு வீட்டிற்கு வாசலிலேயே குடிபோதை நபர்கள் படுத்து உறங்கி விடுவதாகவும் இது போல ஒரு சிலர் இறந்து விடுவது வாடிக்கையாக நிகழ்ந்து வருவதால் அரசு மதுபானக்கடையை அகற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.