முதியவர்களுக்கு எழும் பிரச்சனைகள் மற்றும் அவர்களின் குறைகளைத்தீர்க்கும் விதமாக 14567 என்ற இலவச உதவி எண் நடைமுறையில் உள்ளதால் இதனை எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.
கோவை: கோவை மாவட்ட சமூக நலத்துறையின் சார்பில் இன்று ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் முதியோர் தின விழா கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட கோவை ஆட்சியர் சமீரன், மூத்த குடிமக்களுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். இதனையடுத்து நிகழ்ச்சியில் பேசிய ஆட்சியர், முதுமை என்பது அனுபவத்தின் பொக்கிஷம் எனவும் இந்நேரத்தில் அனைத்து வகையிலும் சமூகத்திற்கும், தேச நலனிற்கும் சேவையாற்றிய மூத்த குடிமக்களுக்கு தனது வாழ்த்துக்களையும், வணக்கங்களையும் தெரிவித்தார். இதோடு மனிதனாப்பிறந்து குழந்தைப்பருவம், இளமைப்பருவம் மற்றும் வயதாகும் போது தான் ஒரு மனிதன் முழுமையடைகிறார் என கூறினார்.

மேலும் முதியவர்களின் அனுபவம், அறிவு, சாதனைகள் ஆகியவற்றை நினைவுக் கூர்ந்து இளைய தலைமுறையினர் ஊக்கம் அடையவதாகவும், உழைப்பாலும், உள்ளத்தாலும், வழிகாட்டுதல்களாலும் நல்ல சமுதாயத்தை உருவாக்கிய மூத்தக் குடிமக்களை நினைத்துப் பெருமிதம் அடைவதாகவும் ஆட்சியர் கூறினார். இதோடு அறிவியல் முன்னேற்றம் காரணமாக இறப்பு விகிதம் குறைந்து, மனிதனின் வாழ்நாள் அதிகரித்து உள்ளதாக கூறிய அவர், இதன் காரணமாக மூதியோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவித்தார். குறிப்பாக தமிழக மக்கள் தொகையில் 8.82 சதவீதம் முதியோர்கள் இருப்பதாகவும் ஆட்சியர் கூறியுள்ளார்.

இதோடு முதுமையில் ஏற்படும் உடல் மாற்றங்கள் மற்றும் தீடிரென நோய் ஏற்பட்டால் எப்படி தீர்வு காணவேண்டும் என்பது குறித்து இளைய தலைமுறைகள், முதியவர்களிடம் கேட்டு அறிந்துக்கொள்ளவது அவசியமான ஒன்று என தெரிவித்துள்ளார். மேலும் தமிழக அரசு மூத்த குடிமக்களுக்காகப் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்ற சூழலில், தங்களது ஏற்படும் பிரச்சனைகள் குறித்து முதியவர்கள் எப்போது வேண்டுமானாலும் குறைகளைத்தெரிவிக்க 14567 என்ற இலவச உதவி எண் நடைமுறையில் உள்ளது. எனவே தயக்கம் இன்றி எப்போது வேண்டுமானாலும் புகார்களைத் தெரிவிக்கலாம் என ஆட்சியர் சமீரன் கூறினார். இந்த நிகழ்ச்சியின் போது சமூக நல அலுவலர் தங்கமணி, வருவாய் கோட்டாச்சியர் ரவி சந்திரன், இளங்கோ மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட கோவை ஆட்சியர் சமீரன், மூத்த குடிமக்களுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். இதனையடுத்து நிகழ்ச்சியில் பேசிய ஆட்சியர், முதுமை என்பது அனுபவத்தின் பொக்கிஷம் எனவும் இந்நேரத்தில் அனைத்து வகையிலும் சமூகத்திற்கும், தேச நலனிற்கும் சேவையாற்றிய மூத்த குடிமக்களுக்கு தனது வாழ்த்துக்களையும், வணக்கங்களையும் தெரிவித்தார். இதோடு மனிதனாப்பிறந்து குழந்தைப்பருவம், இளமைப்பருவம் மற்றும் வயதாகும் போது தான் ஒரு மனிதன் முழுமையடைகிறார் என கூறினார்.
மேலும் முதியவர்களின் அனுபவம், அறிவு, சாதனைகள் ஆகியவற்றை நினைவுக் கூர்ந்து இளைய தலைமுறையினர் ஊக்கம் அடையவதாகவும், உழைப்பாலும், உள்ளத்தாலும், வழிகாட்டுதல்களாலும் நல்ல சமுதாயத்தை உருவாக்கிய மூத்தக் குடிமக்களை நினைத்துப் பெருமிதம் அடைவதாகவும் ஆட்சியர் கூறினார். இதோடு அறிவியல் முன்னேற்றம் காரணமாக இறப்பு விகிதம் குறைந்து, மனிதனின் வாழ்நாள் அதிகரித்து உள்ளதாக கூறிய அவர், இதன் காரணமாக மூதியோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவித்தார். குறிப்பாக தமிழக மக்கள் தொகையில் 8.82 சதவீதம் முதியோர்கள் இருப்பதாகவும் ஆட்சியர் கூறியுள்ளார்.
இதோடு முதுமையில் ஏற்படும் உடல் மாற்றங்கள் மற்றும் தீடிரென நோய் ஏற்பட்டால் எப்படி தீர்வு காணவேண்டும் என்பது குறித்து இளைய தலைமுறைகள், முதியவர்களிடம் கேட்டு அறிந்துக்கொள்ளவது அவசியமான ஒன்று என தெரிவித்துள்ளார். மேலும் தமிழக அரசு மூத்த குடிமக்களுக்காகப் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்ற சூழலில், தங்களது ஏற்படும் பிரச்சனைகள் குறித்து முதியவர்கள் எப்போது வேண்டுமானாலும் குறைகளைத்தெரிவிக்க 14567 என்ற இலவச உதவி எண் நடைமுறையில் உள்ளது. எனவே தயக்கம் இன்றி எப்போது வேண்டுமானாலும் புகார்களைத் தெரிவிக்கலாம் என ஆட்சியர் சமீரன் கூறினார். இந்த நிகழ்ச்சியின் போது சமூக நல அலுவலர் தங்கமணி, வருவாய் கோட்டாச்சியர் ரவி சந்திரன், இளங்கோ மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.