கிணத்துக்கடவு அருகே விவசாய தோட்டத்திலிருந்து சேவல்களைத் திருடிச் சென்ற மூன்று இளைஞரைப் பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.
கோவை: கிணத்துக்கடவு அருகே விவசாய தோட்டத்திலிருந்து சேவல்களைத் திருடிச் சென்ற மூன்று இளைஞரைப் பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள மெட்டுவாவி, வடசித்தூர், வெள்ளேகவுண்டன்புதூர் ஆகிய பகுதியில் உள்ள விவசாய தோட்டங்களில் வளர்க்கும் சேவல்களை மர்ம நபர்கள் திருடிச்சென்று வருவதாக விவசாயிகள் புகார் தெரிவித்து வந்தனர்.
இந்தநிலையில் இன்று வெள்ளேகவுண்டன்புதூர் பகுதியில் பூபாலன் என்பவரின் தோட்டத்தில் வளர்க்கப்பட்டு வந்த சேவலை இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் திருடிச் சென்றதைப் பார்த்து விவசாயிகள் துரத்திச் சென்றனர்.
சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம் துரத்திச் சென்று பிடிபட்ட அந்த 3-இளைஞர்களைப் பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த நெகமம் காவல்துறையினரிடம் அந்த மூன்று இளைஞரை ஒப்படைத்தனர்.
சேவல் திருட்டில் ஈடுபட்ட அந்த இளைஞர்கள் சேரி பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள மெட்டுவாவி, வடசித்தூர், வெள்ளேகவுண்டன்புதூர் ஆகிய பகுதியில் உள்ள விவசாய தோட்டங்களில் வளர்க்கும் சேவல்களை மர்ம நபர்கள் திருடிச்சென்று வருவதாக விவசாயிகள் புகார் தெரிவித்து வந்தனர்.
இந்தநிலையில் இன்று வெள்ளேகவுண்டன்புதூர் பகுதியில் பூபாலன் என்பவரின் தோட்டத்தில் வளர்க்கப்பட்டு வந்த சேவலை இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் திருடிச் சென்றதைப் பார்த்து விவசாயிகள் துரத்திச் சென்றனர்.
சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம் துரத்திச் சென்று பிடிபட்ட அந்த 3-இளைஞர்களைப் பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த நெகமம் காவல்துறையினரிடம் அந்த மூன்று இளைஞரை ஒப்படைத்தனர்.
சேவல் திருட்டில் ஈடுபட்ட அந்த இளைஞர்கள் சேரி பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.