கோவையில் சேவல் திருடர்களை விரட்டிப்பிடித்த பொதுமக்கள்.!!

கிணத்துக்கடவு அருகே விவசாய தோட்டத்திலிருந்து சேவல்களைத் திருடிச் சென்ற மூன்று இளைஞரைப் பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.


கோவை: கிணத்துக்கடவு அருகே விவசாய தோட்டத்திலிருந்து சேவல்களைத் திருடிச் சென்ற மூன்று இளைஞரைப் பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள மெட்டுவாவி, வடசித்தூர், வெள்ளேகவுண்டன்புதூர் ஆகிய பகுதியில் உள்ள விவசாய தோட்டங்களில் வளர்க்கும் சேவல்களை மர்ம நபர்கள் திருடிச்சென்று வருவதாக விவசாயிகள் புகார் தெரிவித்து வந்தனர்.

இந்தநிலையில் இன்று வெள்ளேகவுண்டன்புதூர் பகுதியில் பூபாலன் என்பவரின் தோட்டத்தில் வளர்க்கப்பட்டு வந்த சேவலை இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் திருடிச் சென்றதைப் பார்த்து விவசாயிகள் துரத்திச் சென்றனர்.

சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம் துரத்திச் சென்று பிடிபட்ட அந்த 3-இளைஞர்களைப் பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த நெகமம் காவல்துறையினரிடம் அந்த மூன்று இளைஞரை ஒப்படைத்தனர்.

சேவல் திருட்டில் ஈடுபட்ட அந்த இளைஞர்கள் சேரி பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...