கோவை சரவணம்பட்டிக்கு அருகே உள்ள நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவரிடம் ராக்கிங் செய்த சீனியர் மாணவர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 9 பேரை தேடிவருகின்றனர்.
கோவை: கோவை சரவணம்பட்டி அடுத்த கீரணத்தம் செல்லும் சாலையில் பிபிஜி நர்சிங் கல்லூரி செயல்பட்டுவருகிறது.
இந்த கல்லூரியில் கோவையைச் சேர்ந்த மாணவர்கள் மட்டுமில்லாமல் கேரள மாநிலத்திலிருந்திருந்தும் பல மாணவர்கள் இங்கேயே தங்கி படிக்கிறார்கள். கொரோனா காலக்கட்டத்திலும் மாணவர்கள் அட்மிஷன் பணிகள் நடைபெற்றதோடு, ஆன்லைன் வகுப்புகளும் செயல்பட்டுவந்தது.
இங்கு,கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த 20 வயதான மாணவர் முதலாம் ஆண்டு படித்துவருகிறார். ஊரடங்கினால் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்ட நிலையில் தற்போது நேரடி வகுப்புகள் நடைபெற்றுவருகிறது. இதனால் கேரளத்தைச்சேர்ந்த இந்த மாணவர் கடந்த செப்டம்பர் 20 ஆம் தேி கல்லூரிக்கு வந்துள்ளார் அங்கே உள்ள விடுதியில் தங்கிப்படித்துவருகிறார். இந்நிலையில் தான் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி தனியாக இருந்த மாணவர் அறைக்கு சென்ற சீனியர்கள் 13 பேர் அந்த மாணவரை தங்களது அறைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். பின்னர் அனைவருக்கும் ராக்கிங் செய்ததோடு தங்கள் பெயரை சரியாக செல்ல வேண்டும் இல்லாவிடில் இந்த அறையை விட்டு செல்ல வேண்டும் என்று கூறியுள்ளனர். மேலும் சரியாக சொல்லாத சமயத்தில் சீனியர்கள் மாணவரின் கன்னத்தில் அறைத்து சித்ரவரை செய்துள்ளனர். இதுக்குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் தெரிவித்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட அந்த மாணவர் சொந்த ஊருக்கு சென்று நடந்ததையெல்லாம் பெற்றோர்களிடம் கூறியுள்ளார். இதனைக்கேட்ட பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்ததோடு உடனடியாக மருத்துவமனையில் அனுமதி சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து கோவை சரவணம்பட்டி காவல்நிலையத்தில் இதுக்குறித்து புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் ராக்கிங் செய்த மாணவர்கள் மீது வழக்குப்பதிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் 4 பேரை கைது செய்த நிலையில் தலைமறைவாகியுள்ள 9 பேரை போலீசார் தேடி வருகின்றனர். கல்லூரிகளில் ராக்கிங் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் கோவை கல்லூரியில் நிகழந்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கல்லூரியில் கோவையைச் சேர்ந்த மாணவர்கள் மட்டுமில்லாமல் கேரள மாநிலத்திலிருந்திருந்தும் பல மாணவர்கள் இங்கேயே தங்கி படிக்கிறார்கள். கொரோனா காலக்கட்டத்திலும் மாணவர்கள் அட்மிஷன் பணிகள் நடைபெற்றதோடு, ஆன்லைன் வகுப்புகளும் செயல்பட்டுவந்தது.
இங்கு,கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த 20 வயதான மாணவர் முதலாம் ஆண்டு படித்துவருகிறார். ஊரடங்கினால் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்ட நிலையில் தற்போது நேரடி வகுப்புகள் நடைபெற்றுவருகிறது. இதனால் கேரளத்தைச்சேர்ந்த இந்த மாணவர் கடந்த செப்டம்பர் 20 ஆம் தேி கல்லூரிக்கு வந்துள்ளார் அங்கே உள்ள விடுதியில் தங்கிப்படித்துவருகிறார். இந்நிலையில் தான் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி தனியாக இருந்த மாணவர் அறைக்கு சென்ற சீனியர்கள் 13 பேர் அந்த மாணவரை தங்களது அறைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். பின்னர் அனைவருக்கும் ராக்கிங் செய்ததோடு தங்கள் பெயரை சரியாக செல்ல வேண்டும் இல்லாவிடில் இந்த அறையை விட்டு செல்ல வேண்டும் என்று கூறியுள்ளனர். மேலும் சரியாக சொல்லாத சமயத்தில் சீனியர்கள் மாணவரின் கன்னத்தில் அறைத்து சித்ரவரை செய்துள்ளனர். இதுக்குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் தெரிவித்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட அந்த மாணவர் சொந்த ஊருக்கு சென்று நடந்ததையெல்லாம் பெற்றோர்களிடம் கூறியுள்ளார். இதனைக்கேட்ட பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்ததோடு உடனடியாக மருத்துவமனையில் அனுமதி சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து கோவை சரவணம்பட்டி காவல்நிலையத்தில் இதுக்குறித்து புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் ராக்கிங் செய்த மாணவர்கள் மீது வழக்குப்பதிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் 4 பேரை கைது செய்த நிலையில் தலைமறைவாகியுள்ள 9 பேரை போலீசார் தேடி வருகின்றனர். கல்லூரிகளில் ராக்கிங் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் கோவை கல்லூரியில் நிகழந்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.