குழந்தையைக் கடத்திச் சென்ற சம்பவம் அருகில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ளதன் அடிப்படையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கோவை: பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை அருகே, 5 மாத பெண் குழந்தை கடத்தப்பட்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் மைசூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (35). இவர் ஊர் ஊராகச் சென்று பழைய துணி விற்பனை செய்து வருகிறார். இவரது மனைவி சங்கீதா (27). இவர்களுக்கு, 5 மாத பெண் குழந்தை உட்பட 4 குழந்தைகள் உள்ளனர்.
இவர்கள், கடந்த ஒருவாரமாக கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை மத்திய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் தங்கி துணி விற்பனை செய்து வருகின்றனர்.
நேற்று, (28ம் தேதி) இரவு, 9:30 மணிக்கு ஆனைமலை மத்திய பஸ் ஸ்டாண்ட் அருகில் மணிகண்டன் உணவு வாங்கச் சென்றுள்ளார். அப்போது, சங்கீதா குழந்தைகளை வைத்து அமர்ந்திருந்த போது அங்கு வந்த ஒருவர், குழந்தைகளுக்கு உணவு வாங்கித் தருவதாக பணம் கொடுத்து, குழந்தைகளை நான் பார்த்துக் கொள்கிறேன் எனக்கூறி 5 மாத குழந்தையைக் கையில் வாங்கிக்கொண்டார்.
அப்போது, சங்கீதா உணவு வாங்க அருகில் சென்ற போது, அந்த நபர் மற்றொருவருடன் பைக்கில் பொள்ளாச்சி நோக்கி குழந்தையைக் கடத்திச் சென்றார்.
இதுகுறித்து, ஆனைமலை போலீசார் விசாரித்து வருகின்றனர். குழந்தை கடத்தப்பட்ட சம்பவத்தால், ஆனைமலையில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து டி.எஸ்.பி சீனிவாசன் கூறுகையில்:-

குழந்தையைக் கடத்திச் சென்ற சம்பவம் அருகில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ளது என்றும் அவர்களை விரைந்து கைது செய்வோம் என்றார்.
கர்நாடக மாநிலம் மைசூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (35). இவர் ஊர் ஊராகச் சென்று பழைய துணி விற்பனை செய்து வருகிறார். இவரது மனைவி சங்கீதா (27). இவர்களுக்கு, 5 மாத பெண் குழந்தை உட்பட 4 குழந்தைகள் உள்ளனர்.
இவர்கள், கடந்த ஒருவாரமாக கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை மத்திய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் தங்கி துணி விற்பனை செய்து வருகின்றனர்.
நேற்று, (28ம் தேதி) இரவு, 9:30 மணிக்கு ஆனைமலை மத்திய பஸ் ஸ்டாண்ட் அருகில் மணிகண்டன் உணவு வாங்கச் சென்றுள்ளார். அப்போது, சங்கீதா குழந்தைகளை வைத்து அமர்ந்திருந்த போது அங்கு வந்த ஒருவர், குழந்தைகளுக்கு உணவு வாங்கித் தருவதாக பணம் கொடுத்து, குழந்தைகளை நான் பார்த்துக் கொள்கிறேன் எனக்கூறி 5 மாத குழந்தையைக் கையில் வாங்கிக்கொண்டார்.
அப்போது, சங்கீதா உணவு வாங்க அருகில் சென்ற போது, அந்த நபர் மற்றொருவருடன் பைக்கில் பொள்ளாச்சி நோக்கி குழந்தையைக் கடத்திச் சென்றார்.
இதுகுறித்து, ஆனைமலை போலீசார் விசாரித்து வருகின்றனர். குழந்தை கடத்தப்பட்ட சம்பவத்தால், ஆனைமலையில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து டி.எஸ்.பி சீனிவாசன் கூறுகையில்:-
குழந்தையைக் கடத்திச் சென்ற சம்பவம் அருகில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ளது என்றும் அவர்களை விரைந்து கைது செய்வோம் என்றார்.