வால்பாறையில் பிடிபட்ட புலிக்குட்டிக்கு இரண்டாம் நாளாக தீவிர சிகிச்சை..!

கூண்டில் உள்ள புலிக்குட்டிக்கு உணவாக இறைச்சியும், தண்ணீரும் வழங்கப்பட்டு வருகிறது. ஊசி மூலம் மருந்தும் செலுத்தப்பட்டு வருகிறது.


கோவை: வால்பாறையில் பிடிபட்ட புலிக்குட்டிக்கு இரண்டாம் நாளாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்துள்ள முடீஸ் தேயிலைத் தோட்டப் பகுதியில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் புலி ஒன்று நடமாடுவதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து, வனத்துறையினர் தீவிர தேடுதலில் ஒரு வயது மதிக்கத்தக்க புலிக்குட்டி ஒன்று காயமடைந்த நிலையில் பிடிபட்டது. மேலும், ரொட்டிக்கடை பகுதியில் உள்ள வேட்டை தடுப்பு காவலர்கள் முகாமுக்கு கொண்டு வரப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



மேலும், திருநெல்வேலி வனத்துறை கால்நடை மருத்துவ பிரிவு பேராசிரியர் முத்துகிருஷ்ணன் தலைமையில் மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.



கூண்டில் உள்ள புலிக்குட்டிக்கு உணவாக இறைச்சியும் தண்ணீரும் வழங்கப்பட்டு வருகிறது. ஊசி மூலம் மருந்தும் செலுத்தப்பட்டு வருகிறது. மருத்துவத் துறையினரும் வனத்துறையினரும் புலிக்குட்டியை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இதனிடையே, புலிக்குட்டி பிடிபட்ட 2 நாட்களில் சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Newsletter

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...