வால்பாறையில் பிடிபட்ட புலிக்குட்டிக்கு இரண்டாம் நாளாக தீவிர சிகிச்சை..!

கூண்டில் உள்ள புலிக்குட்டிக்கு உணவாக இறைச்சியும், தண்ணீரும் வழங்கப்பட்டு வருகிறது. ஊசி மூலம் மருந்தும் செலுத்தப்பட்டு வருகிறது.


கோவை: வால்பாறையில் பிடிபட்ட புலிக்குட்டிக்கு இரண்டாம் நாளாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்துள்ள முடீஸ் தேயிலைத் தோட்டப் பகுதியில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் புலி ஒன்று நடமாடுவதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து, வனத்துறையினர் தீவிர தேடுதலில் ஒரு வயது மதிக்கத்தக்க புலிக்குட்டி ஒன்று காயமடைந்த நிலையில் பிடிபட்டது. மேலும், ரொட்டிக்கடை பகுதியில் உள்ள வேட்டை தடுப்பு காவலர்கள் முகாமுக்கு கொண்டு வரப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



மேலும், திருநெல்வேலி வனத்துறை கால்நடை மருத்துவ பிரிவு பேராசிரியர் முத்துகிருஷ்ணன் தலைமையில் மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.



கூண்டில் உள்ள புலிக்குட்டிக்கு உணவாக இறைச்சியும் தண்ணீரும் வழங்கப்பட்டு வருகிறது. ஊசி மூலம் மருந்தும் செலுத்தப்பட்டு வருகிறது. மருத்துவத் துறையினரும் வனத்துறையினரும் புலிக்குட்டியை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இதனிடையே, புலிக்குட்டி பிடிபட்ட 2 நாட்களில் சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Newsletter

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 30ஆம் தேதி நீர்மட்ட நிலவரம் வெளியா...

கோவை முன்னாள் படைவீரர்கள் அலுவலகத்தில் ஆய்வு; நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் சரத்குமார்

கோவை முன்னாள் படைவீரர்கள் அலுவலகத்தில் தமிழ்நாடு மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார் ஆய்வு மேற்கொண்டு, முன்னாள் ப...

வார்டு வளர்ச்சிப் பணிகள் புறக்கணிப்பு குற்றச்சாட்டு; கோவையில் தி.மு.க கவுன்சிலர் தர்ணா

கோவை அருகே தென்கரை பேரூராட்சி மன்றக் கூட்டத்தின் போது, தனது வார்டில் வளர்ச்சிப் பணிகள் மற்றும் தூய்மைப் பணிகள் புறக்கணிக...