திருப்பூரில் 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்வதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் - ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு..!

போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சமரசம் செய்ததை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.


திருப்பூர்: திருப்பூரில் 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்வதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் ஒரு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 12வது வார்டு முருகம்பாளையம் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் விநியோகம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.



இது குறித்து இப்பகுதி பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகள் பலரிடம் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் இன்று திருப்பூர் அவினாசி சாலை, குமார் நகர் சிக்னலில் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்திற்கு மேல் நடந்த இந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது.

இதையடுத்து, போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சமரசம் செய்ததை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...