கோவை சூலுார் அருகே தண்ணீர் தொட்டியில் மூழ்கி நான்கு வயது சிறுவன் பரிதாபமாக பலி..!

வீட்டின் பின்பக்கம் இருந்த சிமெண்ட் தொட்டி நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை சூலுார் அருகே தண்ணீர் தொட்டியில் மூழ்கி நான்கு வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சூலுார் அடுத்த பள்ளபாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ். கட்டிட தொழிலாளியான இவருக்கு மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருவரும் விளையாடிக் கொண்டிருந்தனர். பின்பக்கம் சென்ற சிறுவன் பிரகாஷ் (4) நீண்ட நேரமாகியும் திரும்பவில்லை. குடும்பத்தினர் அனைத்து பகுதியிலும் தேடினர்.

இந்த நிலையில், வீட்டின் பின்புறம் உள்ள சிமெண்ட் தொட்டி நீரில் மூழ்கி கிடந்த சிறுவனை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, சிறுவனை மீட்டு, கோவை அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர்.

ஆனால், சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியதால், குடும்பத்தினர் கதறினர். இது குறித்து சூலுார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...