எஸ்.பி.வேலுமணி ஆட்சியில் நடந்த முறைகேடு: கோவை மாநகராட்சி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் - சி.பி.எம் முன்னாள் மண்டல தலைவர் சி. பத்மனாபன்.

கோவை மாநகராட்சி எஸ்.பி.வேலுமணியின் நேரடி மேற்பார்வையில் தான் செயல்பட்டு வந்தது. எனவே, மாநகராட்சி நிர்வாகத்தில் நடைபெற்ற, நடைபெறாத பணிகள், நிதி நிலைமை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.


கோவை: சி.பி.எம் கட்சியின் முன்னாள் மண்டல தலைவர் சி. பத்மனாபன், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் ஆட்சிக் காலத்தில் கோவை மாநகராட்சியில் நிர்வாக சீர்கேடு ஏற்பட்டுள்ளதாகவும், கடந்த 10 ஆண்டுகளின் நிதி நிலைமை குறித்து வெள்ளை அறிக்கையைவெளியிட வேண்டும் என்று கோவை மாநகராட்சி ஆணையரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

இது குறித்து சி.பி.எம் கட்சியின் முன்னாள் மண்டல தலைவர் சி. பத்மனாபன் தெரிவிக்கையில், 

கோவையைச் சேர்ந்த எஸ்.பி.வேலுமணி தமிழ்நாட்டின் உள்ளாட்சித்துறை அமைச்சராக 2011 முதல் 2021 வரை இருந்த போது, இவரது நேரடி மேற்பார்வையில் தான் கோவை மாநகராட்சி நிர்வாகம் செயல்பட்டு வந்தது. அப்படி செயல்பட்டு வந்த போது தான், பல்வேறு நிர்வாக சீர்கேடுகள் நடைபெற்றது. 

அதனால், கடந்த 10 ஆண்டுகளாக,கோவை மாநகராட்சி நிர்வாகத்தில் நடைபெற்ற, நடைபெறாத பணிகள் குறித்தும் நிதி நிலைமை குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்..மேலும், JNNURM திட்டத்தின் கீழ் பாதாள சாக்கடை மற்றும் திடக்கழிவு மேலாண்மை முழுமையடையாததை குறித்தும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்ற பணிகள் குறித்தும் அதற்காக ஒதுக்கப்பட்ட நிதிகள் மற்றும் வட்டி விகிதம் குறித்தும் தெரிவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

எஸ்.பி.வேலுமணியின் ஆட்சிகாலத்தில், மாநகராட்சியின் வளர்ச்சி பணிகள் அனைத்தும் தொண்டாமுத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தான் பெரிதும் நடந்துள்ளது.மேலும், மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, திடக்கழிவு மேலாண்மை பணி, 100 கோடி வளர்ச்சி பணிகளுக்கான டெண்டர்கள் ரத்து, மாநகராட்சியில் 10 சாலைகள் நெடுஞ்சாலை துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது, இவை அனைத்தும் குறித்து விவரம் அளிக்க வேண்டும். 

ஆகவே, கடந்த 10 ஆண்டுகாலமாக எஸ்.பி.வேலுமணி ஆட்சியில் நடந்த அனைத்து சீர்கேடுகளுக்கும் விளக்கம் தெரிவிக்கும் வண்ணம் கோவை மாநகராட்சி வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன், என்றார்.

Newsletter

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...