கோவை சவுரிபாளையம் அருகே உள்ள ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்த பெண்ணிடம் 2.5 சவரன் செயின் பறிப்பு. திருட்டில் ஈடுபட்ட மோட்டார் சைக்கிளில் வந்த நபர்களை போலீசார் சிசிடிவி மூலம் தேடி வருகின்றனர்.
கோவை: கோவையில் நடந்து சென்ற பெண்ணிடம், பின்தொடர்ந்து சென்று முகவரி கேட்பது போல நடித்து கழுத்திலிருந்த இரண்டரை பவுன் செயினை பறித்துச் சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை சவுரிபாளையம் அருகே உள்ள ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்தவர் மேத்யூ, இவரது மனைவி ரெனி மேத்யூ வயது 53. இவர் அந்த பகுதியில் உள்ள ஜி.வி.ரெசிடென்சி வழியாக வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், ரெனியிடம் இந்த முகவரி எங்கு உள்ளது? என்று கேட்டபடி ஒரு பேப்பரை நீட்டியுள்ளனர்.
அவர்களிடம் அந்த முகவரி குறித்து அந்த பெண்மணி விளக்கிக் கொண்டு இருக்கும்போது, வேண்டுமென்றே பேப்பரை அந்த நபர்கள் கீழே போட்டுள்ளனர். அதை எடுக்க, அந்த பெண் குனிந்த போது, அவர் கழுத்தில் இருந்த இரண்டரை பவுன் தங்க செயினை, கண்ணிமைக்கும் நேரத்தில் பறித்துச் சென்றனர்.
அந்த பெண்ணின் புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
கோவை சவுரிபாளையம் அருகே உள்ள ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்தவர் மேத்யூ, இவரது மனைவி ரெனி மேத்யூ வயது 53. இவர் அந்த பகுதியில் உள்ள ஜி.வி.ரெசிடென்சி வழியாக வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், ரெனியிடம் இந்த முகவரி எங்கு உள்ளது? என்று கேட்டபடி ஒரு பேப்பரை நீட்டியுள்ளனர்.
அவர்களிடம் அந்த முகவரி குறித்து அந்த பெண்மணி விளக்கிக் கொண்டு இருக்கும்போது, வேண்டுமென்றே பேப்பரை அந்த நபர்கள் கீழே போட்டுள்ளனர். அதை எடுக்க, அந்த பெண் குனிந்த போது, அவர் கழுத்தில் இருந்த இரண்டரை பவுன் தங்க செயினை, கண்ணிமைக்கும் நேரத்தில் பறித்துச் சென்றனர்.
அந்த பெண்ணின் புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.