நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மக்கள் பணியாற்ற விரும்பமுள்ளவர்கள் விண்ணப்பக்கலாம்; தன்னார்வலருக்கு அழைப்பு விடுத்த கோவை மாநகராட்சி!

நமக்கு நாமே திட்டத்தில்‌ பங்கேற்க விருப்பமுள்ள கோவை மக்கள் தாங்கள்‌ செயல்படுத்த விரும்பும்‌ மக்கள்‌ நல திட்டத்தைத் தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம் என கோவை மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது.



கோவை: தமிழகத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பல்வேறு மக்கள் நலப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தற்போது தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் உத்தரவின்படி, மீண்டும் தமிழகம் நமக்கு நாமே திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

இதற்காக ரூபாய் 300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் இத்திட்டத்தின் படி பல்வேறு சமூக நலப்பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள், சமூக நல அமைப்புகள், நிறுவனங்கள், சி.எஸ்‌.ஆர்‌. நிதி வழங்கும்‌ நிறுவனங்கள்‌, குடியிருப்போர்‌ நலச்சங்கங்கள்‌ உள்ளிட்டோர்‌ ஒரு பங்கு நிதி அளித்தால்‌, அரசு சார்பில்‌ கூடுதலாக இரு பங்கு நிதி வழங்கப்பட்டு, மக்கள்‌ பரிந்துரைக்கும்‌ சிறப்பு நலப்பணிகள்‌ மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக பல்வேறு அடிப்படைக் கட்டமைப்பு பணிகளான பூங்கா உள்ளிட்ட வசதிகள்‌, நீர்நிலைகள்‌ புனரமைத்தல்‌, பள்ளிகள்‌ மற்றும்‌ அங்கன்வாடி மேம்பாடு, மரக்கன்று நடுதல்‌, நவீன தெரு விளக்குகள்‌ அமைத்தல்‌, விளையாட்டு மைதானங்கள்‌, நூலகங்கள்‌, சுகாதார நிலையங்கள்‌, மின்மயானங்கள்‌ அமைத்தல்‌, சாலைகள்‌, சிறுபாலங்கள்‌ மற்றும்‌ மழைநீர் வடிகால்‌ அமைத்தல்‌ போன்ற பணிகள் இத்திட்டத்தின் மூலம் மேற்கொள்ளவிருக்கிறது.

எனவே நமக்கு நாமே திட்டத்தில்‌ பங்கேற்க விருப்பமுள்ள கோவை மக்கள் தாங்கள்‌ செயல்படுத்த விரும்பும்‌ மக்கள்‌ நல திட்டத்தைத் தோ்வு செய்து, அதற்கான விண்ணப்பத்தை கோயம்புத்தூர்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ அல்லது மாநகரப்‌ பொறியாளரிடம்‌ வழங்கலாம் என அழைப்பு விடுத்துள்ளார். மேலும்‌ இதுக்குறித்த கூடுதல் விபரங்களை அறிய மாநகரப்‌ பொறியாளரை நேரில் சந்திக்கலாம்.

இல்லாவிடில் 8190000200 என்ற தொலைபேசி எண்ணிற்கு அல்லது [email protected] என்ற இ-மெயில்‌ மூலம்‌ தொடர்பு கொண்டு கேட்டறிந்துக்கொள்ளலாம்‌ என கோவை மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

Newsletter

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...