கிணத்துக்கடவில் ஜல்லி கற்களை ஓவர்லோடு ஏற்றி வந்த மினி லாரி பறிமுதல்.!!

அரசம் பாளையத்தில் ஜல்லிக் கற்களை ஓவர்லோடு ஏற்றி வந்த மினி லாரியை பறிமுதல் செய்த காவல்துறையினர் அதிக பாரம் ஏற்றி வந்ததால் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.


கோவை: கிணத்துக்கடவு அருகே அரசம் பாளையத்தில் ஜல்லிக் கற்களை ஓவர்லோடு ஏற்றி வந்த மினி லாரியை பறிமுதல் செய்த காவல்துறையினர் அதிக பாரம் ஏற்றி வந்ததால் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள அரசம் பாளையம் பகுதியில் இன்று கிணத்துக்கடவு காவல் நிலைய உதவி ஆய்வாளர் அருள் பிரகாஷ், சிறப்பு உதவி ஆய்வாளர் சேகரன், காவலர் ஜோசப் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக ஜல்லிக் கற்களை ஏற்றி வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் அரசு நிர்ணயித்த அளவைவிடக் கூடுதலாக ஜல்லிக்கற்கல் இருந்தது தெரியவந்தது.



இதையடுத்து அந்த மினிலாரியை பறிமுதல் செய்த காவல்துறையினர் அதிக பாரம் ஏற்றி வந்ததாக 28ஆயிரம்660 ரூபாய் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.

Newsletter

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...