மழைக்காலம் என்பதால் கோவை மாநகராட்சியில் வடிகால்வாய்களைத் தூர்வாரும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் – ஆணையர் ராஜ கோபால் சுன்கரா உத்தரவு

மழைக்காலம் தொடங்கிவிட்டதால் வடிகால்வாய்களைத் தூய்மைப்படுத்தி, கொசுக்கள் உற்பத்தியாவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு கோவை மாநகராட்சி ஆணையர் ராஜ கோபால் சுன்கரா உத்தரவிட்டுள்ளார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சியின் மேற்கு மண்டலத்தில் முன்களப்பணியாளர்கள் மேற்கொள்ளும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் அப்பகுதியில் நடைபெறும் வளர்ச்சிப்பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலரான ராஜகோபால் சுன்கரா நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் முன்களப்பணியாளர்கள் மக்களுக்கு வீடு, வீடாகச்சென்று சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் உள்ளதா? என்பது குறித்து சோதனை மேற்கொள்ளும் போது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பரிசோதனை செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் பரிசோதனையின்‌ விபரங்களை கோவிட்‌-19 கள ஆய்வுப்‌ பதிவேடுகளில்‌ பதிவு செய்திட வேண்டும்‌ எனவும் களப்பணி மேற்கொள்ளும்போது முகக்கவசம்‌ அணிந்தும்‌, கிருமிநாசினி கொண்டு கைகளை அடிக்கடி சுத்தப்படுத்தி பாதுகாப்போடு இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதோடு கொசுவினால்‌ ஏற்படும்‌ டெங்கு போன்ற நோய்களைத் தடுப்பதற்காக பொதுமக்களிடம்‌ வீடுகளில்‌ உபயோகமற்ற பொருட்கள்‌, பயனற்ற பிளாஸ்டிக்‌ பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும்‌ எனவும் வீடுகளில்‌ உள்ள தண்ணீர் தொட்டிகளில் கொசுக்கள்‌ புகாவண்ணம்‌ மூடி வைக்க வேண்டும்‌ என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என தெரிவித்த ஆணையர், பொதுமக்களிடம்‌ இதுக்குறித்து போதிய விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும்‌ என கூறினார்.



இதனைத்‌ தொடாந்து, வார்டு எண்‌.5க்குட்பட்ட கவுண்டம்பாளையம்‌, சேரன்‌ நகர்‌ பகுதியில்‌ 6 இலட்சம்‌ கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கத்‌ தொட்டியிலிருந்து விநியோகப்படும்‌ குடிநீர் பணிகள்‌ குறித்து ஆய்வு மேற்கொண்டார்.



அதன் பின்னா், வார்டு எண்‌.8 இந்திரா நகா்ப்‌ பகுதியில்‌ மழைநீர் வடிகால்‌ கால்வாயில்‌ தூர்வாரும்‌ பணிகள்‌ நடைபெற்று வருவதை பார்வையிட்டார்.



அப்போது தூய்மைப்பணியாளார்களிடம்‌ வடிகால் கால்வாய்களிலுள்ள அடைப்புகளை அகற்றி சீராகத் தண்ணீர் செல்லும்‌ வகையில்‌ தூய்மைப்படுத்திட வேண்டுமென தூய்மைப்பணியாளா்களிடம்‌ வலியுறுத்தினார்.



மேலும் கோவை மாநகர சீர்மிகு நகரத் திட்டத்தின்‌ கீழ்‌ கிருஷ்ணம்பதி குளத்தில்‌ நடைபெற்றுவரும்‌ புனரமைப்பு பணிகள்‌ குறித்து ஆய்வு மேற்கொண்ட ஆணையாளர்‌ இப்பணிகளை விரைந்து முடிக்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.



இதோடு 21வது வார்டுக்கு உட்பட்ட பனைமரத்தூர் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில்‌ புதியதாக வகுப்பறைக்‌ கட்டிடம்‌ கட்டப்பட்டுவரும்‌ பணிகள்‌ குறித்து பார்வையிட்ட பின்பாக, பூசாரிபாளையம்‌ பகுதியிலுள்ள முதியோர்‌ இல்லத்திலும் ஆய்வினை மேற்கொண்டார்.

இன்று மேற்கு மண்டலத்திற்கு உள்பட்ட பல பகுதிளில் ஆணையர் நடத்திய ஆய்வின் போது,மேற்கு மண்டல உதவி ஆணையாளர்‌ சிவசுப்பிரமணியம்‌, உதவி செயற்பொறியாளர்‌ ஹேமலதா, உதவி பொறியாளர்‌ ஜெகதீஸ்வரி மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ ஆகியோர்‌ உடனிருந்தார்கள்.

Newsletter

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...