கிணத்துக்கடவில் பயிர்களைச் சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகள்-விவசாயிகள் வேதனை.!!!

மயில்கள் தொல்லை இருந்து வரும் நிலையில் காட்டுப்பன்றி தொல்லைகளும் அதிகரித்துள்ளதால் வனத்துறையினர் காட்டுப்பன்றிகளை விரட்டும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை.


கோவை: கிணத்துக்கடவு அருகே விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள கோடங்கிபாளையம், நல்லட்டிபாளையம், கோதவாடி, தேவரடிபாளையம் ஆகிய பகுதிகளில் சொட்டுநீர் பாசனம் மூலம் வாழை, தக்காளி, கத்திரி போன்ற பயிர்கள் ஏக்கர் கணக்கில் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.

ஆனால் விவசாயிகள் சாகுபடி செய்துள்ள விளை நிலங்களுக்குள் இரவு நேரத்தில் காட்டுப்பன்றிகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.



இந்த நிலையில் கிணத்துக்கடவு காமராஜ் காலனி பகுதியில் கணேஷ் என்பவருக்குச் சொந்தமான விளை நிலத்தில் சாகுபடி செய்யப்பட்ட நேந்திரம் வாழை கன்றுகளை நேற்று இரவு புகுந்த காட்டுப்பன்றி கூட்டம் சேதப்படுத்தியுள்ளது.



வாழைகளை வேரோடு பிடுங்கி தண்டுகளை மட்டும் சாப்பிட்டுச் சேதப்படுத்தி உள்ளது.



வாழை சாகுபடி செய்து ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில் முளைக்கும் தருவாயில் உள்ள வாழைகளைக் காட்டுப்பன்றி சேதப்படுத்தி இருப்பது பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி இருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

ஏற்கனவே மயில்கள் தொல்லை இருந்து வரும் நிலையில் தற்போது காட்டுப்பன்றி தொல்லைகளும் அதிகரித்துள்ளதால் வனத்துறையினர் காட்டுப்பன்றிகளை விரட்டும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....