கோவையில் சாலையோரத்தில் அமர்ந்து மது அருந்தியவர்களைப் பார்த்துக்கொண்டே சென்ற நபரை சரமாரியாக கத்தியால் குத்திய வழக்கில் சம்பந்தப்பட்ட இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை: சமீப காலங்களாக மது அருந்துவதன் விளைவாக பல்வேறு குற்றச்சம்பவங்கள் அரங்கேறிவருகிறது.
இதனைத்தடுப்பதற்கு பல நடவடிக்கைகள் எடுத்தாலும் மதுப்போதைக்கு அடிமையானவர்கள் இன்னும் திருந்தியப்பாடில்லை என்று தான் கூற வேண்டும். மேலும் போதையில் என்ன செய்வது என்று தெரியாத நிலையில் தான் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் அவர்கள் ஈடுபடுகின்றனர். இப்படி ஒரு சம்பவம் தான் இன்று கோவையில் நிகழ்ந்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கோவை குனியமுத்தூர் அருகே உள்ள சுகுணா புரத்தைச்சேர்ந்தவர் 23 வயதான சிவா. பெயிண்டராக பணியாற்றி வரும் இவர் பணியை முடித்துவிட்டு தனது நண்பருடன் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது மலைப்பகுதியைச்சேர்ந்த 24 வயதான நிசாருதீன் மற்றும் 25 வயதான ஹரிஷ் ஆகியோர் சாலையோரத்தில் நின்று மது அருந்திக்கொண்டிருந்தனர். பொது வெளியில் இப்படி மது அருந்துகிறார்களே? என்று பார்த்துக்கொண்டே சென்ற பெயிண்டர் சிவாவை நிசாருதீன் மற்றும் ஹரிஷ் ஆகியோர் சேர்ந்து தாக்க ஆரம்பித்தனர். ஒரு கட்டத்தில் அந்த இருவரும் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பெயிண்டர் சிவாவின் தலை மற்றும் கழுத்தில் குத்திவிட்டு அங்கிருந்து சென்று விட்டனர்.
இதனையடுத்து படுகாயமடைந்த சிவாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் நிசாருதீன் மற்றும் ஹரிஷ் ஆகிய இருவர் மீது குனியமுத்தூர் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இந்த இருவரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
இதனைத்தடுப்பதற்கு பல நடவடிக்கைகள் எடுத்தாலும் மதுப்போதைக்கு அடிமையானவர்கள் இன்னும் திருந்தியப்பாடில்லை என்று தான் கூற வேண்டும். மேலும் போதையில் என்ன செய்வது என்று தெரியாத நிலையில் தான் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் அவர்கள் ஈடுபடுகின்றனர். இப்படி ஒரு சம்பவம் தான் இன்று கோவையில் நிகழ்ந்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கோவை குனியமுத்தூர் அருகே உள்ள சுகுணா புரத்தைச்சேர்ந்தவர் 23 வயதான சிவா. பெயிண்டராக பணியாற்றி வரும் இவர் பணியை முடித்துவிட்டு தனது நண்பருடன் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது மலைப்பகுதியைச்சேர்ந்த 24 வயதான நிசாருதீன் மற்றும் 25 வயதான ஹரிஷ் ஆகியோர் சாலையோரத்தில் நின்று மது அருந்திக்கொண்டிருந்தனர். பொது வெளியில் இப்படி மது அருந்துகிறார்களே? என்று பார்த்துக்கொண்டே சென்ற பெயிண்டர் சிவாவை நிசாருதீன் மற்றும் ஹரிஷ் ஆகியோர் சேர்ந்து தாக்க ஆரம்பித்தனர். ஒரு கட்டத்தில் அந்த இருவரும் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பெயிண்டர் சிவாவின் தலை மற்றும் கழுத்தில் குத்திவிட்டு அங்கிருந்து சென்று விட்டனர்.
இதனையடுத்து படுகாயமடைந்த சிவாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் நிசாருதீன் மற்றும் ஹரிஷ் ஆகிய இருவர் மீது குனியமுத்தூர் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இந்த இருவரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.