கோவையில் சாலையோரத்தில் அமர்ந்து மது அருந்தியவர்களைப்பார்த்த நபருக்குச் சரமாரியாக கத்திக்குத்து; 2 பேரை கைது செய்து சிறையில் அடைப்பு!

கோவையில் சாலையோரத்தில் அமர்ந்து மது அருந்தியவர்களைப் பார்த்துக்கொண்டே சென்ற நபரை சரமாரியாக கத்தியால் குத்திய வழக்கில் சம்பந்தப்பட்ட இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: சமீப காலங்களாக மது அருந்துவதன் விளைவாக பல்வேறு குற்றச்சம்பவங்கள் அரங்கேறிவருகிறது.

இதனைத்தடுப்பதற்கு பல நடவடிக்கைகள் எடுத்தாலும் மதுப்போதைக்கு அடிமையானவர்கள் இன்னும் திருந்தியப்பாடில்லை என்று தான் கூற வேண்டும். மேலும் போதையில் என்ன செய்வது என்று தெரியாத நிலையில் தான் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் அவர்கள் ஈடுபடுகின்றனர். இப்படி ஒரு சம்பவம் தான் இன்று கோவையில் நிகழ்ந்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கோவை குனியமுத்தூர் அருகே உள்ள சுகுணா புரத்தைச்சேர்ந்தவர் 23 வயதான சிவா. பெயிண்டராக பணியாற்றி வரும் இவர் பணியை முடித்துவிட்டு தனது நண்பருடன் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது மலைப்பகுதியைச்சேர்ந்த 24 வயதான நிசாருதீன் மற்றும் 25 வயதான ஹரிஷ் ஆகியோர் சாலையோரத்தில் நின்று மது அருந்திக்கொண்டிருந்தனர். பொது வெளியில் இப்படி மது அருந்துகிறார்களே? என்று பார்த்துக்கொண்டே சென்ற பெயிண்டர் சிவாவை நிசாருதீன் மற்றும் ஹரிஷ் ஆகியோர் சேர்ந்து தாக்க ஆரம்பித்தனர். ஒரு கட்டத்தில் அந்த இருவரும் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பெயிண்டர் சிவாவின் தலை மற்றும் கழுத்தில் குத்திவிட்டு அங்கிருந்து சென்று விட்டனர்.

இதனையடுத்து படுகாயமடைந்த சிவாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் நிசாருதீன் மற்றும் ஹரிஷ் ஆகிய இருவர் மீது குனியமுத்தூர் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இந்த இருவரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

Newsletter

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...