வால்பாறை முடீஸ் பஜாரில் பகல் நேரத்திலே புலிகள் நடமாடுவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதனால் புலிகளின் நடமாட்டத்தை ட்ரோன் கேமரா மூலம் வனத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
கோவை: கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்துள்ளது முடீஸ் பஜார் பகுதி. இப்பகுதியில் 100 க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் தேயிலைத்தோட்டங்கள் உள்ளது. இங்கு சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றிவருகின்றனர்.
இந்த தொழிலாளர்கள் வழக்கம் போல தேயிலைத்தோட்டப்பணிக்கு வேலைக்காகக் காலையில் சென்றனர். அப்போது நடந்து செல்லும் வழியே புலியைப்பார்த்த தொழிலாளர்கள் அங்கிருந்து அச்சத்துடன் ஓட்டம் பிடித்தனர்.
பின்னர் உடனடியாக இதுக்குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் விரைந்தனர்.

இதனையடுத்து உதவி வனப்பாதுகாவலர் செல்வம், வன பாதுகாப்பு படை உதவி வனப் பாதுகாவலர் விஜயன், வனத்துறை மருத்துவர் சுகுமாரன், வனச்சரகர் நடராஜன் மற்றும் வனவர் உமர் தலைமையில் வனத்துறையினர் அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

இதனைத்தொடர்ந்து வனத்துறையினர் ட்ரோன் கேமரா மூலம் புலியின் நடமாட்டத்தை நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். மேலும் ஆனைமலை புலிகள் காப்பக மாவட்ட வன அலுவலர் மற்றும் உதவி கள இயக்குனர் கணேசன் சம்பவ இடத்தை ஆய்வு மேற்கொண்டார். இதோடு புலியின் நடமாட்டத்தைக் கண்காணிக்க சுமார் 50க்கும் மேற்பட்ட வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தொழிலாளர்கள் வழக்கம் போல தேயிலைத்தோட்டப்பணிக்கு வேலைக்காகக் காலையில் சென்றனர். அப்போது நடந்து செல்லும் வழியே புலியைப்பார்த்த தொழிலாளர்கள் அங்கிருந்து அச்சத்துடன் ஓட்டம் பிடித்தனர்.
பின்னர் உடனடியாக இதுக்குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் விரைந்தனர்.
இதனையடுத்து உதவி வனப்பாதுகாவலர் செல்வம், வன பாதுகாப்பு படை உதவி வனப் பாதுகாவலர் விஜயன், வனத்துறை மருத்துவர் சுகுமாரன், வனச்சரகர் நடராஜன் மற்றும் வனவர் உமர் தலைமையில் வனத்துறையினர் அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
இதனைத்தொடர்ந்து வனத்துறையினர் ட்ரோன் கேமரா மூலம் புலியின் நடமாட்டத்தை நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். மேலும் ஆனைமலை புலிகள் காப்பக மாவட்ட வன அலுவலர் மற்றும் உதவி கள இயக்குனர் கணேசன் சம்பவ இடத்தை ஆய்வு மேற்கொண்டார். இதோடு புலியின் நடமாட்டத்தைக் கண்காணிக்க சுமார் 50க்கும் மேற்பட்ட வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.