பொள்ளாச்சி - பாலக்காடு ரோடு ரயில்வே மேம்பாலத்தில் 30 நாட்களில் காரிடார் அமைக்கப்பட்டு 3 மாதத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் - சண்முகசுந்தரம் எம்.பி

ரூ. 55.17 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டுமானப் பணிகளைஎம்.பி. சண்முகசுந்தரம் மேம்பாலம் பணிகளை ஆய்வு செய்தார்.


கோவை: பொள்ளாச்சி - பாலக்காடு ரோடு மேம்பாலத்தில் 30 நாட்களில் காரிடார் அமைக்கப்பட்டு மூன்று மாதத்திற்குள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று சண்முகசுந்தரம் எம்.பி தெரிவித்தார்.

பொள்ளாச்சியிலிருந்து கேரளா மாநிலத்துக்கு செல்லும் முக்கிய போக்குவரத்து வழித்தடமான பொள்ளாச்சி - பாலக்காடு சாலையில் வடுகபாளையம் பிரிவில் குறுக்கிடும் ரயில்பாதையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.55.17 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் அமைக்கும் பணிக்கு 2018ம் ஆண்டு ஒப்புதல் வழங்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன.

பொள்ளாச்சி - போத்தனூர் ரயில் பாதையின் ஒரு புறம் 17 தூண்கள், மறுபுறம் ஒரு தூண் என மொத்தம் 18 தூண்கள் அமைக்கப்பட்டு, அதில் ஓடுதளம் அமைக்கப்பட்டு வருகிறது.

நெடுஞ்சாலைத் துறை சார்பில், பாலத்தின் இரு பக்கமும் கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், ரயில்வே தண்டவாளத்தின் மேல், இரும்பு காரிடார்கள் அமைத்து பாலத்தை இணைக்கும் பணி மட்டும் நிறைவடையாமல் உள்ளது.



இந்நிலையில், எம்.பி. சண்முகசுந்தரம் மேம்பாலம் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார்.

பின்னர் அவர், செய்தியாளர்களிடம் பேசியபோது,



பொள்ளாச்சி – பாலக்காடு சாலையில் நடைபெற்றும் ரயில்வே மேம்பால கட்டுமானப்பணியில் இரும்பு காரிடார்கள் அமைக்க ஒப்புதல் கிடைக்காமல் காலதாமதம் ஏற்பட்டு வந்தது. தற்போது அதற்கு அனுமதி கிடைத்துள்ளது. 30 நாட்களில் இரும்பு காரிடார்கள் அமைக்கும் பணி நிறைவடையும்.

இதையடுத்து, பொள்ளாச்சி - பாலக்காடு நெடுஞ்சாலையில் கட்டுமானப்பணிகள் 3 மாதங்களில் நிறைவடைந்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவித்தார்.

Newsletter

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...