தமிழகத்திலிருந்து ஆந்திராவிற்கு கடத்திச்சென்ற 1 லட்ச ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள்களை ரயில்வே பறக்கும் படை போலீசார் பறிமுதல் செய்ததோடு ஆந்திராவைத்சேர்ந்த ஒருவரை கைது செய்தனர்.
கோவை: தமிழகத்தில் இருந்து அண்டை மாநிலங்களுக்குப் போதைப்பொருள்கள் ரயில்கள் மூலம் கடத்தப்படுவதாகத் தகவல் வெளியானது.
இந்த நிலையில் ரயில்வே கூடுதல் இயக்குனர் சந்திப் ராய் ரத்தோர் உத்தரவின்படி, ரயில்வே காவல் துறைத் தலைவர் கல்பனா நாயக், ரயில்வே காவல்துறை துணைத்தலைவர் ஜெய கவுரி அறிவுரையின்படி, காவல் கண்காணிப்பாளர் ரயில்வே சென்னை இளங்கோ மேற்பார்வையில், நான்கு உட்கோட்ட கண்காணிப்பாளர்கள், 12 காவல் ஆய்வாளர்கள், தலைமையில் காவல்துறையினர் ரயில்வே காவலர்கள் 23 குழுக்களாகப் பிரிந்து, சென்னை மற்றும் மற்ற பகுதிகளுக்கு ஆயுதம் மற்றும் பணம் எடுத்துச் செல்கிறார்களா? என்று சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் தான் நேற்று இரவு (வண்டி எண் 06219 )சாம்ராஜ் நகரில் இருந்து திருப்பதி செல்லும் விரைவு ரயில் வண்டியை ஜோலார்பேட்டை காவல் நிலைய தனிப்படையினர் ரயில் நிலையத்தில் வைத்து சோதனை மேற்கொண்டனர்.

அதில் D2 கோச் 24 பிரிவில் திருப்பதியைச் சேர்ந்த 43 வயதான ரஜினி குமார்ப, என்பவருடைய உடமைகளைப் பரிசோதனை செய்ததில் ஹான்ஸ் கூளிப், குட்கா, பான்பராக் உட்பட மொத்த பாக்கெட்டுகள் 17 ஆயிரத்து 915, அதன் மொத்த எடை 42 கிலோ, எடை கொண்டதோடு இதன் மொத்த மதிப்பு ரூபாய் 1 லட்சம் மதிப்பில் இருந்தது. இதனையடுத்து போதைப்பொருள்களை பறிமுதல் செய்ததோடு, சம்பந்தப்பட்ட நபரை போலீசார் கைது செய்தனர். பின்னர் கைது செய்த நபரை ரயில்வே போலீசார் திருப்பத்தூர் உணவு பாதுகாப்பு அதிகாரி வசம் அவரை ஒப்படைத்தனர்.
மேலும் சிறப்பாக செயல்பட்டு போதைப்பொருள்களை கடத்தியவர்களை கைது செய்த தனிப்படையினரை, ரயில்வே கூடுதல் இயக்குனர் அமலாக்கத்துறை சந்திப்ராய் ரத்தோர் பாராட்டினார். மேலும் பொதுமக்கள் 24 மணி நேரமும் 1512 இலவச அழைப்பு மற்றும் 9962 500 500 என்ற மொபைல் எண்ணிற்கு எந்த தகவல்களையும், புகார்களையும் அளிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ரயில்வே கூடுதல் இயக்குனர் சந்திப் ராய் ரத்தோர் உத்தரவின்படி, ரயில்வே காவல் துறைத் தலைவர் கல்பனா நாயக், ரயில்வே காவல்துறை துணைத்தலைவர் ஜெய கவுரி அறிவுரையின்படி, காவல் கண்காணிப்பாளர் ரயில்வே சென்னை இளங்கோ மேற்பார்வையில், நான்கு உட்கோட்ட கண்காணிப்பாளர்கள், 12 காவல் ஆய்வாளர்கள், தலைமையில் காவல்துறையினர் ரயில்வே காவலர்கள் 23 குழுக்களாகப் பிரிந்து, சென்னை மற்றும் மற்ற பகுதிகளுக்கு ஆயுதம் மற்றும் பணம் எடுத்துச் செல்கிறார்களா? என்று சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் தான் நேற்று இரவு (வண்டி எண் 06219 )சாம்ராஜ் நகரில் இருந்து திருப்பதி செல்லும் விரைவு ரயில் வண்டியை ஜோலார்பேட்டை காவல் நிலைய தனிப்படையினர் ரயில் நிலையத்தில் வைத்து சோதனை மேற்கொண்டனர்.
அதில் D2 கோச் 24 பிரிவில் திருப்பதியைச் சேர்ந்த 43 வயதான ரஜினி குமார்ப, என்பவருடைய உடமைகளைப் பரிசோதனை செய்ததில் ஹான்ஸ் கூளிப், குட்கா, பான்பராக் உட்பட மொத்த பாக்கெட்டுகள் 17 ஆயிரத்து 915, அதன் மொத்த எடை 42 கிலோ, எடை கொண்டதோடு இதன் மொத்த மதிப்பு ரூபாய் 1 லட்சம் மதிப்பில் இருந்தது. இதனையடுத்து போதைப்பொருள்களை பறிமுதல் செய்ததோடு, சம்பந்தப்பட்ட நபரை போலீசார் கைது செய்தனர். பின்னர் கைது செய்த நபரை ரயில்வே போலீசார் திருப்பத்தூர் உணவு பாதுகாப்பு அதிகாரி வசம் அவரை ஒப்படைத்தனர்.
மேலும் சிறப்பாக செயல்பட்டு போதைப்பொருள்களை கடத்தியவர்களை கைது செய்த தனிப்படையினரை, ரயில்வே கூடுதல் இயக்குனர் அமலாக்கத்துறை சந்திப்ராய் ரத்தோர் பாராட்டினார். மேலும் பொதுமக்கள் 24 மணி நேரமும் 1512 இலவச அழைப்பு மற்றும் 9962 500 500 என்ற மொபைல் எண்ணிற்கு எந்த தகவல்களையும், புகார்களையும் அளிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.