வாளையாறு அணையில் திடீரென ஏற்பட்ட சுழலில் சிக்கிக் கல்லூரி மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு; விபத்தில் சிக்கியவர்கள் எந்த ஊர் என போலீசார் விசாரணை!

கோவை ஹிந்துஸ்தான் கல்லூரியைச்சேர்ந்த 3 மாணவர்கள் இன்று வாளையாறுஅணையில் குளிக்கச்சென்ற போது திடீரென ஏற்பட்ட சுழலில் சிக்கி உயிரிழந்தனர். இதுக்குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.


கோவை: இயற்கை எழில் கொஞ்சும் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ளது வாளையாறு அணை. பார்ப்பதற்கு மிகவும் ரம்மியாக இருக்கும் இந்த இடத்தைப்பார்ப்பதற்கே கோவையைச்சேர்ந்த பெரும்பாலான மக்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சுற்றுலா வருவது வழக்கம்.

தற்போது குளிர்ச்சியானச் சூழல் நிலவுவதால் அதனை ரசிப்பதற்காக கோவை ஹிந்துஸ்தான் கல்லூரியைச்சேர்ந்த மாணவர்கள் வாளையாறு சென்றுள்ளனர். அங்கு அணையில் இறங்கி குளித்த நிலையில், திடீரென அணையில் ஏற்பட்ட சுழல் காரணமாக 3 பேர் தண்ணீரில் மூழ்கியுள்ளனர். இதனையடுத்து அந்தப்பகுதியில் வழியாக சென்று கொண்டிருந்தவர்கள் இச்சம்பவம் குறித்து பாலக்காடு தீயணைப்புத் துறைக்கும், வாளையாறு தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.

இதனையடுத்து சம்பவம் இடத்திற்கு விரைந்த போலீசார் தண்ணீரில் சிக்கி 3 பேரை தீயணைப்புத்துறையினர் மற்றும் பொதுமக்கள் காவல்துறையினர் தொடர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. முதற்கட்ட விசாரணையில் கோவை இந்துஸ்தான் கல்லூரியில் பாலிடெக்னிக் படிக்கக்கூடிய மாணவர்கள் சஞ்சீவ், ராகுல்,பூர்னேஷ் என்பது தெரியவந்துள்ளது. மேலும் உயிரிழந்த மூன்று பேரும் எந்த ஊரைச்சேர்ந்தவர்கள் என்பது தெரியவில்லை என்பதால் போலீசார் தொடர் விசாரணை நடத்திவருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....