கிணத்துக்கடவு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைப்பெற்ற நிலையில், 4-மனுக்களுக்கு உடனடி தீர்வு காண அதிகாரிகளுக்கு உத்தரவு.
கோவை: கிணத்துக்கடவு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைப்பெற்ற நிலையில், 4-மனுக்களுக்கு உடனடி தீர்வு காண அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
கொரோனா தொற்று காரணமாகப் பொதுமக்களிடம் திங்கட்கிழமை தோறும் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமையில் அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் ஆன்லைன் மூலம் மக்களிடம் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்று வருகிறது.
அதன்படி இன்று கிணத்துக்கடவு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல ஒருங்கிணைப்பு அலுவலர் அம்சவேணி கலந்துகொண்டு மனுக்களைப் பெற்றார்.
இதில் நத்தம் பட்டா கேட்டு 4-பேரும், வீட்டுமனை பட்டாக்கள் கேட்டு 6-பேரும், பூமி உட்பிரிவு கேட்டு ஒருவரும், ஜாதிசான்றுகேட்டு 6-பேரும், மின் இணைப்பு சான்றிதழ் கேட்டு ஒருவரும் என மொத்தம் 18-மனுக்கள் பொது மக்களிடமிருந்து பெறப்பட்டது.
இதில் 4-மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டன. மீதியுள்ள 14-மனுக்கள் குறித்து விசாரணை நடத்தித் தீர்வு காண அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்த முகாமில் கிணத்துக்கடவு வட்டாட்சியர் சசிரேகா சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் கனகேஸ்வரி, கிணத்துக்கடவு மண்டல துணை வட்டாட்சியர் ராமராஜ் உட்பட வருவாய் துறை அதிகாரிகள் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கொரோனா தொற்று காரணமாகப் பொதுமக்களிடம் திங்கட்கிழமை தோறும் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமையில் அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் ஆன்லைன் மூலம் மக்களிடம் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்று வருகிறது.
அதன்படி இன்று கிணத்துக்கடவு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல ஒருங்கிணைப்பு அலுவலர் அம்சவேணி கலந்துகொண்டு மனுக்களைப் பெற்றார்.
இதில் நத்தம் பட்டா கேட்டு 4-பேரும், வீட்டுமனை பட்டாக்கள் கேட்டு 6-பேரும், பூமி உட்பிரிவு கேட்டு ஒருவரும், ஜாதிசான்றுகேட்டு 6-பேரும், மின் இணைப்பு சான்றிதழ் கேட்டு ஒருவரும் என மொத்தம் 18-மனுக்கள் பொது மக்களிடமிருந்து பெறப்பட்டது.
இதில் 4-மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டன. மீதியுள்ள 14-மனுக்கள் குறித்து விசாரணை நடத்தித் தீர்வு காண அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்த முகாமில் கிணத்துக்கடவு வட்டாட்சியர் சசிரேகா சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் கனகேஸ்வரி, கிணத்துக்கடவு மண்டல துணை வட்டாட்சியர் ராமராஜ் உட்பட வருவாய் துறை அதிகாரிகள் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.