கோவை சுந்தராபுரத்தில் திமுக ஆட்சியின் போது அன்றைய முதல்வர் கருணாநிதி கட்டிக்கொடுத்த வீட்டினைத் தனக்கு தான் சொந்தம் என தனிநபர் ஒருவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
கோவை: கோவை சுந்தராபுரத்திற்கு அருகே உள்ள குறிச்சி கிராமத்தைச்சேர்ந்த மக்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் ஒன்றினை அளித்துள்ளனர்.
அதில் அன்றைய திமுக ஆட்சிக்காலத்தின் போது முதல்வராக இருந்த கருணாநிதி குறிச்சி சில்வர் ஜூப்ளி வீதியில் இருந்த ஓலைக்குடிசைகளையெல்லாம் அகற்றிவிட்டு, மக்களின் நலன்களுக்காக அரசு தொகுப்பு வீடுகளைக்கட்டிதர உத்தரவு பிறப்பித்தார். அதன்படி தொகுப்பு வீடுகள் கட்டி பல ஆண்டுகளாக இங்கே வாழ்ந்துவருகிறோம். ஆனால் கடந்த செப்டம்பர் 4ஆம் தேதி முதல் தனி நபர் ஒருவர் நாங்கள் குடியிருக்கும் வீடுகள் உள்ள இடத்தை, “தன்னுடைய இடம் என்று கூறி தொடர்ந்து பிரச்சனை கொடுப்பதாகவும், நான் என்ன சொன்னாலும் அரசு அதிகாரிகள் கேட்பார்கள் எனவும் எனவே உடனடியாக காலி செய்யுங்கள் இல்லை வீட்டை இடித்துவிடுவோம்“ என தெரிவித்து வருகிறார்.
மேலும் குறிச்சி கிராமத்தில் எங்களுடைய முப்பாட்டன் காலத்தில் இருந்து வாழ்ந்து வருகிறோம் என்றும், முன்னோர்கள் காலத்தில் இருந்தே சடலங்களை அடக்கம் செய்யும் பணிகளை இங்கு செய்துவருகிறோம். இப்படிப்பட்ட சூழலில், பல ஆண்டுகளாக அரசு கட்டிக்கொடுத்த வீடுகளில் வசிக்கும் எங்களை வெளியேற சொல்வது நியாயமில்லை.

எனவே இங்கு வாழும் மக்களைத் தொடர்ந்து இன்னல்களுக்கு ஆளாக்கிவரும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் புகார் மனு அளித்துள்ளனர். மேலும் இந்த நகலை தமிழ்நாடு முதல்வர், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர், தமிழ்நாடு, குடிசை மாற்று வாரியம், கோவை காவல்துறை ஆணையாளர் மற்றும் தெற்கு வட்டாச்சியர், உள்ளிட்டோருக்கும் பாதிக்கப்பட்ட மக்கள் அனுப்பியுள்ளனர்.
அதில் அன்றைய திமுக ஆட்சிக்காலத்தின் போது முதல்வராக இருந்த கருணாநிதி குறிச்சி சில்வர் ஜூப்ளி வீதியில் இருந்த ஓலைக்குடிசைகளையெல்லாம் அகற்றிவிட்டு, மக்களின் நலன்களுக்காக அரசு தொகுப்பு வீடுகளைக்கட்டிதர உத்தரவு பிறப்பித்தார். அதன்படி தொகுப்பு வீடுகள் கட்டி பல ஆண்டுகளாக இங்கே வாழ்ந்துவருகிறோம். ஆனால் கடந்த செப்டம்பர் 4ஆம் தேதி முதல் தனி நபர் ஒருவர் நாங்கள் குடியிருக்கும் வீடுகள் உள்ள இடத்தை, “தன்னுடைய இடம் என்று கூறி தொடர்ந்து பிரச்சனை கொடுப்பதாகவும், நான் என்ன சொன்னாலும் அரசு அதிகாரிகள் கேட்பார்கள் எனவும் எனவே உடனடியாக காலி செய்யுங்கள் இல்லை வீட்டை இடித்துவிடுவோம்“ என தெரிவித்து வருகிறார்.
மேலும் குறிச்சி கிராமத்தில் எங்களுடைய முப்பாட்டன் காலத்தில் இருந்து வாழ்ந்து வருகிறோம் என்றும், முன்னோர்கள் காலத்தில் இருந்தே சடலங்களை அடக்கம் செய்யும் பணிகளை இங்கு செய்துவருகிறோம். இப்படிப்பட்ட சூழலில், பல ஆண்டுகளாக அரசு கட்டிக்கொடுத்த வீடுகளில் வசிக்கும் எங்களை வெளியேற சொல்வது நியாயமில்லை.
எனவே இங்கு வாழும் மக்களைத் தொடர்ந்து இன்னல்களுக்கு ஆளாக்கிவரும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் புகார் மனு அளித்துள்ளனர். மேலும் இந்த நகலை தமிழ்நாடு முதல்வர், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர், தமிழ்நாடு, குடிசை மாற்று வாரியம், கோவை காவல்துறை ஆணையாளர் மற்றும் தெற்கு வட்டாச்சியர், உள்ளிட்டோருக்கும் பாதிக்கப்பட்ட மக்கள் அனுப்பியுள்ளனர்.