காரமடை பகுதியில் ரோந்து பணியில் இருந்த போலீசார் அவுட்டு காய் வைத்திருந்த கார்த்தி என்பவரை மடக்கிப்பிடித்தனர்.
கோவை: சட்டத்திற்கு விரோதமாக அவுட் காய் வைத்திருந்த, கோவை கணுவாய்பாளையம் பகுதியைச் சேர்ந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபட்டு வரும் நபர்களைப் பிடிக்க, ரோந்து பணிகளை தீவிரப்படுத்த மாவட்ட எஸ்.பி. செல்வநாகரத்தினம் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, கோவை மாவட்டம், காரமடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உதவி ஆய்வாளர், முனுசாமி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபர் உதவி ஆய்வாளரை கண்டதும் அவ்விடத்தை விட்டு தப்பிக்க முற்பட்டுள்ளார். இதனைக் கண்ட உதவி ஆய்வாளர், சந்தேகமடைந்து அந்நபரைப் பிடித்து விசாரித்த போது முன்னுக்குப்பின் முரணாகப் பதில் அளித்துள்ளார்.
தொடர்ந்து, காவல் ஆய்வாளருக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த காவல் ஆய்வாளர் குமார், அந்த நபரை விசாரித்தபோது அவர் கணுவாய்பாளையம் பகுதியைச் சேர்ந்த கார்த்தி (29) என தெரியவந்தது. மேலும், அவரது கையில் வைத்திருந்த பையைச் சோதனை செய்தபோது அதில் சட்டத்திற்கு விரோதமாக காட்டுப்பன்றியை வேட்டையாடுவதற்காக தயாரிக்கப்பட்ட அவுட் காய் வைத்திருப்பது தெரியவந்தது.
இந்நிலையில், கார்த்தியை கைது செய்து அவரிடமிருந்த அவுட் காயைப் பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.
கோவை மாவட்டத்தில் சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபட்டு வரும் நபர்களைப் பிடிக்க, ரோந்து பணிகளை தீவிரப்படுத்த மாவட்ட எஸ்.பி. செல்வநாகரத்தினம் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, கோவை மாவட்டம், காரமடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உதவி ஆய்வாளர், முனுசாமி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபர் உதவி ஆய்வாளரை கண்டதும் அவ்விடத்தை விட்டு தப்பிக்க முற்பட்டுள்ளார். இதனைக் கண்ட உதவி ஆய்வாளர், சந்தேகமடைந்து அந்நபரைப் பிடித்து விசாரித்த போது முன்னுக்குப்பின் முரணாகப் பதில் அளித்துள்ளார்.
தொடர்ந்து, காவல் ஆய்வாளருக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த காவல் ஆய்வாளர் குமார், அந்த நபரை விசாரித்தபோது அவர் கணுவாய்பாளையம் பகுதியைச் சேர்ந்த கார்த்தி (29) என தெரியவந்தது. மேலும், அவரது கையில் வைத்திருந்த பையைச் சோதனை செய்தபோது அதில் சட்டத்திற்கு விரோதமாக காட்டுப்பன்றியை வேட்டையாடுவதற்காக தயாரிக்கப்பட்ட அவுட் காய் வைத்திருப்பது தெரியவந்தது.
இந்நிலையில், கார்த்தியை கைது செய்து அவரிடமிருந்த அவுட் காயைப் பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.