கோவை கிணத்துக்கடவில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த 2 பேர் மீது வழக்கு பதிவு - போலீசார் விசாரணை..!

சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவை கிணத்துக்கடவில் அதிகாலை நேரத்தில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித் திரிந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு காவல் நிலைய உதவி ஆய்வாளர் கணேசமூர்த்தி இன்று அதிகாலை மூன்று மணிக்கு மேல் ரோந்து பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது பழைய பேருந்து நிலையம் முன்பு, அதிகாலை நேரத்தில் சந்தேகத்துக்கிடமாக சுற்றிய நபரை பிடித்து விசாரணை செய்ததில் நாமக்கல் மாவட்டம் சேர்ந்த குழந்தைவேல் என்பதும், இதேபோல் புதிய பேருந்து நிலையம் முன்பு சந்தேகத்திற்கிடமாக சுற்றிதிரிந்த நபரை பிடித்து விசாரித்ததில கிணத்துக்கடவு மதுரைவீரன் தெருவை சேர்ந்த மணிகண்டன் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....