சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: கோவை கிணத்துக்கடவில் அதிகாலை நேரத்தில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித் திரிந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு காவல் நிலைய உதவி ஆய்வாளர் கணேசமூர்த்தி இன்று அதிகாலை மூன்று மணிக்கு மேல் ரோந்து பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது பழைய பேருந்து நிலையம் முன்பு, அதிகாலை நேரத்தில் சந்தேகத்துக்கிடமாக சுற்றிய நபரை பிடித்து விசாரணை செய்ததில் நாமக்கல் மாவட்டம் சேர்ந்த குழந்தைவேல் என்பதும், இதேபோல் புதிய பேருந்து நிலையம் முன்பு சந்தேகத்திற்கிடமாக சுற்றிதிரிந்த நபரை பிடித்து விசாரித்ததில கிணத்துக்கடவு மதுரைவீரன் தெருவை சேர்ந்த மணிகண்டன் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு காவல் நிலைய உதவி ஆய்வாளர் கணேசமூர்த்தி இன்று அதிகாலை மூன்று மணிக்கு மேல் ரோந்து பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது பழைய பேருந்து நிலையம் முன்பு, அதிகாலை நேரத்தில் சந்தேகத்துக்கிடமாக சுற்றிய நபரை பிடித்து விசாரணை செய்ததில் நாமக்கல் மாவட்டம் சேர்ந்த குழந்தைவேல் என்பதும், இதேபோல் புதிய பேருந்து நிலையம் முன்பு சந்தேகத்திற்கிடமாக சுற்றிதிரிந்த நபரை பிடித்து விசாரித்ததில கிணத்துக்கடவு மதுரைவீரன் தெருவை சேர்ந்த மணிகண்டன் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.