வால்பாறையில் கொரோனா தொற்று பரவலை தடுக்க வீடு வீடாக கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் தீவிரம்..!

அதேபோல, வீடு வீடாகச் சென்று உடல் வெப்ப நிலை பரிசோதனை மற்றும் வீட்டில் உள்ளவர்களுக்கு சளி காய்ச்சல் இருக்கிறதா என்று விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


கோவை: வால்பாறையில் கொரோனா தொற்றை தடுக்கும் வகையில், வீடு வீடாக கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. வால்பாறை பகுதியில் கடந்த சில தினங்களாக. கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், வால்பாறை பகுதியில் கொரோனா தொற்று பரவாமல் தடுத்திட வால்பாறை நகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இதனை முன்னிட்டு, நகராட்சி ஊழியர்கள் மூலம் வீடு வீடாகச் சென்று உடல் வெப்ப நிலை பரிசோதனை, வீட்டில் உள்ளவர்களுக்கு சளி காய்ச்சல் இருக்கிறதா என்று விசாரணை செய்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



இந்நிலையில், நகராட்சி சுகாதாரத் துறையின் சார்பில் வால்பாறை பிரதான சாலை, காந்தி சிலை பேருந்து நிலையம், புது மார்க்கெட், நகைக்கடை வீதி, பிரதான சாலை, கோ ஆப்ரேட்டிங் காலனி, நடுமலை சாலை, அண்ணா நகர், கக்கன் காலனி உள்பட பல்வேறு இடங்களில் வீடு வீடாக கிருமி நாசினி அடிக்கும் பணியில் நகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

மேலும், சாலைகளில் முகக் கவசம் அணியாமல் செல்பவர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் தேயிலை தோட்டப் பகுதிகளிலும் கிருமி நாசினி அடிக்கும் பணி நடைபெறும் என்று நகராட்சி சுகாதார துறையினர் தெரிவித்தனர்.

Newsletter

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....