உக்கடம் புல்லுக்காடு பகுதியைச் சேர்ந்த மூவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
கோவை: கோவையில் போதை மாத்திரை விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை பெரியகடை வீதி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக 3 பேர் நின்று கொண்டிருந்தனர்.
இதையடுத்து, அவர்கள் மூவரை பிடித்து விசாரித்த போது அவர்களிடம் போதை மாத்திரைகள் இருப்பது தெரியவந்தது.
தொடர் விசாரணையில் உக்கடம், புல்லுக்காடு பகுதியைச் சேர்ந்த நவசாத் (22), செபீக் (24), நிசாருதீன் (22) என்பது தெரிய வந்தது. இதையடுத்து, மூவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
கோவை பெரியகடை வீதி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக 3 பேர் நின்று கொண்டிருந்தனர்.
இதையடுத்து, அவர்கள் மூவரை பிடித்து விசாரித்த போது அவர்களிடம் போதை மாத்திரைகள் இருப்பது தெரியவந்தது.
தொடர் விசாரணையில் உக்கடம், புல்லுக்காடு பகுதியைச் சேர்ந்த நவசாத் (22), செபீக் (24), நிசாருதீன் (22) என்பது தெரிய வந்தது. இதையடுத்து, மூவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.