கோவை மாவட்ட உள்ளாட்சி இடைத்தேர்தல் 2 பேரின் வேட்பு மனுக்கள் நிராகரிப்பு; 92 பேரின் மனுக்கள் ஏற்பு..!

வேட்பு மனுக்களை திரும்ப பெற நாளை பிற்பகல் 3 மணி வரை அவகாசம் உள்ளதாகவும் அதன்பிறகு வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாவட்ட உள்ளாட்சி இடைதேர்தலில் போட்டியிட தாக்கல் செய்தவர்களின் 2 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவி உள்பட காலியாக உள்ள 16 உள்ளாட்சி இடங்களுக்கான வேட்பு மனுதாக்கல் கடந்த 15ம் தேதி துவங்கி 22ம் தேதி வரை நடைபெற்றது. இதில் ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு 21 பேர் உள்பட மொத்தம் 94 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன.

இந்த வேட்பு மனுக்களின் பரிசீலனை நேற்று நடைபெற்றது. இதில் 2 பேரின் வேட்பு மனுக்கள் மட்டும் நிராகரிக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள 92 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கோவை மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு விண்ணப்பித்த நாம் தமிழர் கட்சியின் மாற்று வேட்பாளரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. தொடர்ந்து கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட ஒருவரின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு 63 மனுக்களும், கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 9 மனுக்களும், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு 20 மனுக்கள் என மொத்தம் 92 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இதையடுத்து, வேட்பு மனுக்களை திரும்பப் பெறுதல் நாளை (சனிக்கிழமை) பிற்பகல் 3 மணி வரை அவகாசம் உள்ளது. அதன் பின்னர் வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....