கோவை மாவட்ட உள்ளாட்சி இடைத்தேர்தல் 2 பேரின் வேட்பு மனுக்கள் நிராகரிப்பு; 92 பேரின் மனுக்கள் ஏற்பு..!

வேட்பு மனுக்களை திரும்ப பெற நாளை பிற்பகல் 3 மணி வரை அவகாசம் உள்ளதாகவும் அதன்பிறகு வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாவட்ட உள்ளாட்சி இடைதேர்தலில் போட்டியிட தாக்கல் செய்தவர்களின் 2 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவி உள்பட காலியாக உள்ள 16 உள்ளாட்சி இடங்களுக்கான வேட்பு மனுதாக்கல் கடந்த 15ம் தேதி துவங்கி 22ம் தேதி வரை நடைபெற்றது. இதில் ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு 21 பேர் உள்பட மொத்தம் 94 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன.

இந்த வேட்பு மனுக்களின் பரிசீலனை நேற்று நடைபெற்றது. இதில் 2 பேரின் வேட்பு மனுக்கள் மட்டும் நிராகரிக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள 92 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கோவை மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு விண்ணப்பித்த நாம் தமிழர் கட்சியின் மாற்று வேட்பாளரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. தொடர்ந்து கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட ஒருவரின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு 63 மனுக்களும், கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 9 மனுக்களும், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு 20 மனுக்கள் என மொத்தம் 92 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இதையடுத்து, வேட்பு மனுக்களை திரும்பப் பெறுதல் நாளை (சனிக்கிழமை) பிற்பகல் 3 மணி வரை அவகாசம் உள்ளது. அதன் பின்னர் வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

வார்டு வளர்ச்சிப் பணிகள் புறக்கணிப்பு குற்றச்சாட்டு; கோவையில் தி.மு.க கவுன்சிலர் தர்ணா

கோவை அருகே தென்கரை பேரூராட்சி மன்றக் கூட்டத்தின் போது, தனது வார்டில் வளர்ச்சிப் பணிகள் மற்றும் தூய்மைப் பணிகள் புறக்கணிக...

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...