தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு இன்று ஆதியோகி சிலை முன்னதாக நாட்டுப்புறக் கலைகளின் மூலம் கோவையில் ஊட்டச்சத்து உணவுகளின் பயன்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவை: கோவையில் தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டத்தின் சார்பில் ஊட்டச்சத்து உணவுகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
கோவை ஆதியோகி சிலை முன்பாக நடைபெற்ற இந்த விழிப்புணர்வு முகாமில், கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், வளர் இளம் பருவ பெண்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்து எது? என்ன மாதிரியான சத்தான உணவுகள் மற்றும் சிறு தானிய உணவுகளை நம்முடைய அன்றாட உணவு முறையில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

அதிலும் மக்கள் எளிதில் புரிந்துக்கொள்ளும் வகையில், சிலம்பாட்டம், பழங்குடியினர் நடனம் போன்ற நாட்டுப்புறக் கலைகளின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தியது, இதில் பங்கேற்ற அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.
மேலும் இந்நிகழ்ச்சியில், இரத்த சோகையைத் தடுக்கும் விதமாக, முருங்கை கீரை, பசலை கீரை, பேரீச்சம் பழம் போன்ற இரும்பு சத்துமிக்க உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்வது குறித்தும் தெரிவிக்கப்பட்டது. இதோடு உடலுக்கு தேவையான அனைத்துச் சத்துக்கள் சரிவிகிதமாக எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் இந்த விழிப்புணர்வு நிகழ்வில் அறிவுறுத்தப்பட்டது. அத்துடன், குழந்தைப் பிறந்ததில் இருந்து குறிப்பிட்ட நாள்கள் வரை குழந்தையின் ஆரோக்கிய மேம்பாட்டிற்காகக் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் மற்றும் சுகாதார முறையில் இருப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

கோவை தொண்டாமுத்தூர் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜோதி அவர்களின் அறிவுறுத்தலின்படி நடைபெற்ற இந்த விழிப்புணர்வில் நிகழ்ச்சியில்,சுற்றுவட்டார அங்கன்வாடிப் பணியாளர்கள், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
கோவை ஆதியோகி சிலை முன்பாக நடைபெற்ற இந்த விழிப்புணர்வு முகாமில், கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், வளர் இளம் பருவ பெண்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்து எது? என்ன மாதிரியான சத்தான உணவுகள் மற்றும் சிறு தானிய உணவுகளை நம்முடைய அன்றாட உணவு முறையில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
அதிலும் மக்கள் எளிதில் புரிந்துக்கொள்ளும் வகையில், சிலம்பாட்டம், பழங்குடியினர் நடனம் போன்ற நாட்டுப்புறக் கலைகளின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தியது, இதில் பங்கேற்ற அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.
மேலும் இந்நிகழ்ச்சியில், இரத்த சோகையைத் தடுக்கும் விதமாக, முருங்கை கீரை, பசலை கீரை, பேரீச்சம் பழம் போன்ற இரும்பு சத்துமிக்க உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்வது குறித்தும் தெரிவிக்கப்பட்டது. இதோடு உடலுக்கு தேவையான அனைத்துச் சத்துக்கள் சரிவிகிதமாக எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் இந்த விழிப்புணர்வு நிகழ்வில் அறிவுறுத்தப்பட்டது. அத்துடன், குழந்தைப் பிறந்ததில் இருந்து குறிப்பிட்ட நாள்கள் வரை குழந்தையின் ஆரோக்கிய மேம்பாட்டிற்காகக் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் மற்றும் சுகாதார முறையில் இருப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.
கோவை தொண்டாமுத்தூர் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜோதி அவர்களின் அறிவுறுத்தலின்படி நடைபெற்ற இந்த விழிப்புணர்வில் நிகழ்ச்சியில்,சுற்றுவட்டார அங்கன்வாடிப் பணியாளர்கள், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.