கடந்த 5-மாத காலமாகச் சம்பளம் வழங்காததால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாகக் கூறி கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: திருப்பூரில் நிலுவை சம்பளத் தொகையை வழங்கக் கோரி கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் கல்லூரி சாலையில் அமைந்துள்ள சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் ஏராளமானோர் கௌரவ விரிவுரையாளர்கள் பத்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வரக்கூடிய சூழ்நிலையில் கொரோனா காலத்தில் இணைய வகுப்புகளிலும், தற்போது நேரடி வகுப்புகளிலும் கலந்து கொண்டு உள்ளனர்.
இந்த சூழ்நிலையில், கடந்த 5-மாத காலமாகக் கவுரவ விரிவுரையாளர்களுக்குச் சம்பளம் வழங்காததால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், தமிழக அரசு உடனடியாக கவனத்தில் கொண்டு விரிவுரையாளர்களுக்கான நிலுவை சம்பளம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கல்லூரி முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் கல்லூரி சாலையில் அமைந்துள்ள சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் ஏராளமானோர் கௌரவ விரிவுரையாளர்கள் பத்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வரக்கூடிய சூழ்நிலையில் கொரோனா காலத்தில் இணைய வகுப்புகளிலும், தற்போது நேரடி வகுப்புகளிலும் கலந்து கொண்டு உள்ளனர்.
இந்த சூழ்நிலையில், கடந்த 5-மாத காலமாகக் கவுரவ விரிவுரையாளர்களுக்குச் சம்பளம் வழங்காததால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், தமிழக அரசு உடனடியாக கவனத்தில் கொண்டு விரிவுரையாளர்களுக்கான நிலுவை சம்பளம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கல்லூரி முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.