கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 2 ஆயிரம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகள் இருப்பு உள்ளது

கோவை மாவட்டத்தில் கோவிஷீல்டு எந்த முகாம்களிலும் கையிருப்பு இல்லை. இ.எஸ்.ஐ.,யில் கோவாக்சின் 2000 டோஸ் கோவாக்சின் கையிருப்பு உள்ளது. 2 ஆம் தவணை செலுத்த வருவோருக்கு முன்னுரிமை.


கோவை: கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் மொத்தம் உள்ள 1,080 படுக்கைகளில், 630 கொரோனாவுக்கும், 450 படுக்கைகள் இ.எஸ்.ஐ. அட்டைதாரர்களுக்கு சிகிச்சையளிக்கவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும், கடந்த மாதம் 24ம் தேதி முதல் 24 மணி நேரம் செயல்படும் தடுப்பூசி மையமும் இங்கு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டதால், கோவையில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. இச்சூழலில், கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 2 ஆயிரம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ரவிக்குமார் கூறுகையில், "மாவட்டத்தில் தற்போது கோவிஷீல்டு தடுப்பூசி எந்த முகாம்களிலும் கையிருப்பு இல்லை. இ.எஸ்.ஐ.,யில் கோவாக்சின் 2000 டோஸ் கோவாக்சின் கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது. அதேசமயம், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த வருவோருக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது,’’ என்றார்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...