கோவையில் இடியுடன் கூடிய திடீர் மழை; போக்குவரத்து பாதிப்பு

தொடர்ந்து ஒரு வார காலமாக அக்னி நட்சத்திரம் போல வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், இன்று மதியம் தீடீரென பெய்த மழையால் மக்கள் சற்றே நிம்மதி அடைந்துள்ளனர்.



கோவை: கோவையில் தொடர்ந்து ஒரு வார காலமாக அக்னி நட்சத்திரம் போல வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், இன்று மதியம் தீடீரென பெய்த மழையால் மக்கள் சற்றே நிம்மதி அடைந்துள்ளனர்.

தொடரும், வெப்பச்சலனம் காரணமாக கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்து வந்த போதிலும், மழை பெய்யாததால் மக்கள் ஏமாற்றம் அடைந்த வந்தனர்.



இந்த நிலையில், இன்று ஒரு மணி அளவில் திடீரென கோவை மற்றும் சுற்று வட்டார பகுதியில் கருமேகம் சூழ்ந்து, குளிர்ந்த காற்று வீசியது. இதனை தொடர்ந்து திடீரென பலத்த சூறைக்காற்றுடன் மழை கொட்டித் தீர்த்தது.



மதியம் 2 மணியிலிருந்து தொடர்ந்து கோவையில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. கோவை காந்திபுரம், உக்கடம், கலெக்டர் அலுவலகம், கணபதி, சரவணம்பட்டி, ரத்தினபுரி, மணியகாரம்பாளையம், அவிநாசி ரோடு, சித்ரா ஏர்போர்ட், சிங்காநல்லூர், காந்திபுரம் பேருந்து நிலையம், ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.



மழை நீர் பெருக்கெடுத்து சாலைகளில் ஓடியதால், மக்களுடைய இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இருந்தாலும், அடித்து வந்த வெயிலுக்கு பெய்த மழையால் மக்கள் மனம் சிறிதேனும் குளிரிந்துள்ளது என்றே கூறவேண்டும்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...